தமிழகமே உற்று நோக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் மனு மீது காரசார விசாரணை தொடங்கியது!
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரி திமுக சார்பில் தொடரப்பட்ட மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது.
சென்னை: சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரி திமுக தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது.
இந்நிலையில் இன்று இந்த இரு வழக்குகளும் விசாரணைக்கு வந்துள்ளது. இதில் முதல் வழக்காக எதை விசாரிக்க வேண்டும் என்பது தொடர்பான வாதம் நடைபெற்றது. நீதிபதி இந்த வழக்குக்கு புதியவர் என்பதால் இரு தரப்பிலும் தாக்கல் செய்யும் மனுக்களை அலசி ஆராய்ந்து முடிவுக்கு காலம் பிடிக்கும் என்பதால் இன்று எவ்வித உத்தரவுகளும் பிறப்பிக்காமல் வழக்கு ஒத்தி வைக்கப்படும் என்றே தெரிகிறது.

இந்நிலையில் ஆளுநரை சந்தித்த திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரினர். எனினும் இது அதிமுகவின் உள்கட்சி விவகாரம் என்பதால் தன்னால் தலையிட முடியாது என்று ஆளுநர் கைவிரித்து விட்டார்.
இதனிடையே தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் விற்பனை நடைபெற்று வருகிறது என்பதை தெரிவிக்க திமுக எம்எல்ஏக்கள் 20 பேர் சட்டசபைக்கு ஆதாரமாக குட்காவை கொண்டு வந்தனர். இந்த விவகாரத்தில் திமுக எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்துவிடக் கூடும் என்பதால் நீதிமன்றத்தை நாடிய திமுக தன் எம்எல்ஏக்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுப்பதற்கு தடை வாங்கியது.
சட்டசபையை கூட்ட ஆளுநர் மறுப்பு தெரிவித்துவிட்டதால் பெரும்பான்மை நிரூபிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில் அந்த 18 எம்எல்ஏக்களையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்துவிட்டார். இதை எதிர்த்து 18 எம்எல்ஏக்களும் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த இரு வழக்குகளும் கடந்த 14-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அக்டோபர் 4-ஆம் தேதி வரை நீதிபதிகள் தடை விதித்தனர். அதேபோல் 18 தொகுதிகளுக்கு மறுதேர்தல் அறிவிக்கக் கூடாது என்றும் அதேவேளையில் 18 பேரின் தகுதி நீக்கத்துக்கு தடை விதிக்க முடியாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில் இன்று இந்த இரு வழக்குகளும் விசாரணைக்கு வரவுள்ளது. இன்று பிறப்பிக்கப்படும் உத்தரவை பொருத்து தமிழகத்தில் அடுத்தடுத்த திருப்பங்கள் நடைபெறலாம் என தெரிகிறது.
-
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் போகாத மா.கம்யூனிஸ்ட்! என்ன நடந்தது? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
“2 மேடைகளில் எது தமிழ்நாட்டுக்கான மேடை?” அதிமுக தலைவர்களின் பேச்சுக்கு ஸ்டாலின் காட்டிய ரியாக்ஷன்! -
29 சீட் டீல் ஓகே? சென்னை வரும் டெல்லி விஐபி.. புஸ்ஸான தவெக பிளான்.. ஜெட் வேகத்தில் திமுக -
ஸ்டாலின் டூ அண்ணாமலை வரை... 2021 தேர்தலில் டாப் 10 லீடர்கள் தொகுதிகளின் ரிசல்ட் இதுதான்.. ரீவைண்ட் -
2021ல் திமுக vs அதிமுக.. வாக்கு வித்தியாசம் வெறும் 5.7% தான்.. கேம்சேஞ்சரான நாதக, அமமுக, கமல்ஹாசன்! -
8 கேட்கும் விசிக.. 6க்கு இழுக்கும் திமுக.. அழுத்தமாக நிற்கும் திருமாவளவன்.. திமுக கணக்கு என்ன? -
"கவுண்டவுன் ஸ்டார்ட்".. அண்ணா அறிவாலயத்தில் மின்னும் டிஜிட்டல் போர்டு.. திமுகவினர் உற்சாகம்! -
மதுரையில் 8 தொகுதிகளில் உதயசூரியன்.. வேட்பாளர்கள் தேர்வு கிட்டத்தட்ட ஓவர்.. செல்லூர் ராஜுவுக்கு செக் -
யார் பெரிய தலை? கதர் கட்சியில் ’கை’கலப்பு! 2 ஆக பிரிந்த நிர்வாகிகள்! டெல்லிக்கு சென்ற பஞ்சாயத்து! -
விஜய் எவ்வளவு ஓட்டு வாங்குவார்? நேர்காணலின் போது திமுக நிர்வாகிகளிடம் ஸ்டாலின் எழுப்பிய கேள்வி! -
ஸ்டாலினை நேரில் சந்தித்த திருமாவளவன்.. காங்கிரஸ் பாணியில் விசிகவின் வியூகம் கைகொடுக்குமா












Click it and Unblock the Notifications