சுயநல அதிமுகவிடம் மக்கள் ஆட்சியைக் கொடுத்து விட்டார்களே.. டி.கே.எஸ். இளங்கோவன் விரக்தி!
சென்னை: அதிமுக சுயநலம் மிக்கது. மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த விரும்பாத கட்சி. ஆனால் அக்கட்சியிடம் போய் மக்கள் ஆட்சியைக் கொடுத்து விட்டனர் என்று கூறியுள்ளார் திமுக ராஜ்யசபா எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன்.
ஏன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார் இளங்கோவன். மேலும் தமிழக மக்கள் அதிமுகவிடம் ஆட்சியைத் தந்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக இளங்கோவன் அளித்துள்ள பேட்டியிலிருந்து....

சுயநல அதிமுக
அதிமுக மிகவும் சுயநலம் மிக்க கட்சி. இக்கட்சியிடம் அடுத்த 5 ஆண்டுகளையும் ஆட்சி செய்ய மக்கள் அதிகாரம் கொடுத்திருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அதிமுக எப்போதுமே மாநிலத்தின் நலனைக் கருத்தில் கொண்டதே கிடையாது.

நல்லது செய்யாது
இந்த அரசு நல்லது செய்யாது. மக்களின் வளர்ச்சிக்கு தேவையானதை செய்யாது. பொருளாதார வளர்ச்சியை கொண்டு வராது. தங்களைப் பற்றிக் கவலைப்படக் கூடியவர்கள் அதிமுக அமைச்சர்கள்.

துரதிர்ஷ்டம் பிடித்த ஐந்தாண்டுகள்
அடுத்த ஐந்து ஆண்டுகளும் தமிழகத்தை துரதிர்ஷ்டம்தான் ஆளப் போகிறது. தமிழக மக்களின் இந்த முடிவு மிகவும் வருத்தத்திற்குரியது.

டெல்லி செல்லத் தயாரா ஜெயலலிதா?
மீனவர் பிரச்சினை தொடர்பாக தொடர்ந்து பிரதமருக்கு கடிதம் மட்டுமே எழுதி வருகிறார் ஜெயலலிதா. அவருக்குத் தைரியம் இருந்தால் டெல்லி சென்று பிரதமர் மோடியிடம் நேரடியாக முறையிடட்டும். உண்மையிலேயே அவருக்கு தமிழக மீனவர்கள் மீது அக்கறை இருந்தால் டெல்லி சென்று பிரதமருடன் நேரடியாக மோத வேண்டும். அதைச் செய்ய அவர் தயாரா? என்றார் இளங்கோவன்.
-
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு! -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்!












Click it and Unblock the Notifications