முரசொலி பவள விழா: திமுக தலைமையில் 20-க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் மெகா கூட்டணி உதயம்?
சென்னை: திமுக தலைமையில் 20-க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் மெகா கூட்டணி ஒன்று உதயமாக இருக்கிறது என்பதை சென்னையில் நடைபெற்ற முரசொலி பவள விழா சுட்டிக்காட்டியுள்ளது.
Recommended Video

சென்னை கொட்டிவாக்கத்தில் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் பவளவிழா இன்று நடைபெற்றது. இந்த பவளவிழாவில் தமிழகத்தின் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே மேடையில் திரண்டிருந்தன.

20-க்கும் மேற்பட்ட தலைவர்கள்
காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, பார்வார்டு பிளாக் என 20-க்கும் மேற்பட்ட கட்சிகள், இயக்கங்களின் தலைவர்கள் இந்த மேடையில் அமர்ந்திருந்தனர். ஏற்கனவே கருணாநிதியின் சட்டசபை வைரவிழாவில் பாஜகவுக்கு எதிரான தேசிய கட்சிகளின் தலைவர்கள் ஒன்றாக திரண்டிருந்தனர்.

அனைத்து தலைவர்கள்...
தற்போது தமிழக எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரையும் ஒரே மேடையில் ஏற்றியிருக்கிறது முரசொலி பவளவிழா. தற்போதைய தமிழக அரசியலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக தவிர அனைத்து கட்சிகளும் திமுகவுடன் கைகோர்த்தி நிற்கின்றன.

முகமலர்ச்சியுடன் வைகோ
கடந்த சில தேர்தல்களாக திமுகவுக்கு எதிராக வியூகம் வகுத்து செயல்பட்டுக் கொண்டிருந்த மதிமுகவின் பொதுச்செயலர் வைகோவும் இப்போது தாய்வீட்டு நிகழ்ச்சியில் முகம் மலர்ச்சியுடன் மர்ந்திருக்கிறார். 2016 சட்டசபை தேர்தலுக்கு முன்னர் வரை அதிமுக கூட்டணியில் இருந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், பார்வார்டு பிளாக் கதிரவனும் இன்றைய முரசொலி பவளவிழாவில் மேடையேறியதும் குறிப்பிடத்தக்கது.

மெகா கூட்டணிக்கு அச்சாரம்?
தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசு எந்த நேரத்திலும் கவிழலாம்; தேர்தல் எப்போது வேண்டுமானாலும் என்கிற நிலை இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தின் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒரே மேடையில் திமுக ஏற்றியிருப்பது என்பது ஒரு மெகா கூட்டணிக்கான அச்சாரம் என்றே பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications