பினாமி அரசு தூக்கி எறியப்படும்.. திமுக ஆட்சி அமைந்ததும் ஜெ. மறைவு பற்றி நீதி விசாரணை: ஸ்டாலின்
திமுக ஆட்சி அமைந்ததும் முதல் அறிவிப்பாக, ஜெயலலிதா மறைவுக்கான காரணம் என்ன என்பது குறித்த நீதி விசாரணை அமைக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை: சட்டசபையில் சமீபத்தில் நடந்த களேபரத்தை கண்டித்து திமுக சார்பில் இன்று மாநிலம் முழுக்க உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. திருச்சியில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றார்.
இதையடுத்து உரையாற்றிய ஸ்டாலின் கூறியதாவது: ஜெயலலிதா மறைவு குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என்று, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். இப்போது எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றுள்ளார். அப்போது, எங்க அம்மாவின் உயிர்தான் எங்களுக்கு முக்கியம் என்று எடப்பாடி பழனிச்சாமி நீதி விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும். 5 உத்தரவுகளுக்கு பழனிச்சாமி கையெழுத்திட்டார். அப்போது ஜெயலலிதா மறைவுக்கு காரணம் என்ன என்பதை கண்டறிய நீதி விசாரணைக்கு இன்னொரு கையெழுத்தையும் போட்டிருக்க வேண்டும்.

இந்த ஆட்சி நீடித்து நிலைத்து நிற்கும் ஆட்சி கிடையாது. எங்களால் மட்டுமல்ல, அனைவராலும் தூக்கி எறியப்படும் ஆட்சிதான் அதிமுக அரசு. திமுக அரசு அமைந்ததும், மக்களுக்கு பல நல்ல திட்டங்களை அரசு கொண்டுவரும். முதல் அறிவிப்பாக, முன்னாள் முதல்வராக இருந்து மறைந்த ஜெயலலிதா மறைவுக்கான காரணம் என்ன என்பது குறித்த நீதி விசாரணை அமைக்கப்படும். அதை யாராலும் தடுக்க முடியாது. தடுக்கும் யோக்கியதை எவருக்கும் கிடையாது. விசாரணை நடந்த பிறகு யார் யாரெல்லாம் மாட்டுவார்கள், சிக்க இருக்கிறார்கள் என்பது அப்போது தெரியும்.
ஆட்சியை கலைக்க வேண்டும் என்று திமுக போராட்டம் நடத்தவில்லை. கலைக்க வேண்டும் என்று நினைத்திருந்தால், ஜெயலலிதா மறைந்த உடனேயே, எங்கள் வேலையை ஆரம்பித்திருப்போம். ஒரு 20 எம்.எல்.ஏக்களை இந்த பக்கம் இழுத்து ஆட்சியை கலைத்துவிட்டிருக்கலாமே என்று மக்களே திமுகவை திட்டுகிறார்கள். ஆனால் கொல்லைப்புறமாக ஆட்சியை பிடிக்க அண்ணாவும், கலைஞரும் சொல்லித்தரவில்லை. மக்களை சந்தித்து, மக்கள் ஆதரவு மூலமாகவே திமுக ஆட்சிக்கு வரும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications