அறிவாலயத்தில் விஷம் குடித்த தி.மு.க. தொண்டர்! உட்கட்சி தேர்தலில் தோல்வியால் விபரீதம்!!
Subscribe to Oneindia Tamil
சென்னை: உட்கட்சி தேர்தலில் தோல்வியடைந்த திமுக தொண்டர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக உட்கட்சி தேர்தலில் கோவை மாவட்டம் தெற்கு மாநகர் வட்டச் செயலாளர் பதவிக்கு அதே பகுதியைச் சேர்ந்த ரமணி (41) போட்டியிட்டார். வாக்கெடுப்பின் முடிவில் ரமணி தோற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ரமணி, மனைவி தேவகியுடன் நேற்று பிற்பகலில் அண்ணா அறிவாலயத்துக்கு வந்தார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்டவர் தில்லுமுல்லு செய்து வெற்றிபெற்றுவிட்டதாக திமுக நிர்வாகிகளிடம் அவர் புகார் கூறியதாகத் தெரிகிறது. இதனையடுத்து திடீரென ரமணி விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை திமுகவினர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.












Click it and Unblock the Notifications