ஐபிஎல் எதிர்ப்பு, என்எல்சி முற்றுகை, மத்திய அரசு அலுவலங்களுக்கு பூட்டு-தமிழ் அமைப்புகள் அதிரடி!
தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்தக்கூடாது என தமிழ் அமைப்புகள் எச்சரித்துள்ளன.
Recommended Video

சென்னை: தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்தக்கூடாது என தமிழ் அமைப்புகள் எச்சரித்துள்ளன.
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன், திருமுருகன் உள்ளிட்டோர் சென்னை சேப்பாக்கத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய வேல்முருகன் தமிழகத்தில் ஐபிஎல்போட்டிகள் நடத்தக்கூடாது என தமிழ் அமைப்புகள் சார்பில் வலியுறுத்தினார். ஐபிஎல் நிர்வாகம், தமிழக அரசு, காவல்துறை ஆகியோர் ஐபிஎல் போட்டிகளுக்கு ஆதரவு தரக்கூடாது என்றும் வேல்முருகன் கோரிக்கை விடுத்தார்.

போட்டி நடத்தினால்
மீறி கிரிக்கெட் போட்டி நடத்தினால் தங்களின் அமைப்பை சேர்ந்தவர்கள் டிக்கெட் பெற்று மைதானத்துக்குள் சென்று போராட்டம் நடத்துவார்கள் என்றும் வேல்முருகன் தெரிவித்தார்.

புறந்தள்ளினால்
மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை ஐபிஎல் போட்டிகள் நடத்தக்கூடாது என்றும் தமிழகத்தின் கோரிக்கையை புறந்தள்ளினால் மக்கள் வீதிக்கு வந்து போராடுவார்கள் என்றும் வேல்முருகன் தெரிவித்தார்.

தண்ணீர் கொடுத்தால் மின்சாரம்
இதைத்தொடர்ந்து ஏப்ரல் 10ஆம் தேதி மத்திய அரசின் என்எல்சி நிறுவனத்தை முற்றுகையிடப்படும் என்றும் கர்நாடகா தண்ணீர் கொடுத்தால் நாங்கள் மின்சாரம் தருவோம் என்ற கொள்கையின் அடிப்படையில் தமிழ் தேசிய அமைப்புகள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

மத்திய அரசு அலுவலகங்கள்
ஏப்ரல் 10 ஆம் தேதிக்குப் பிறகு தமிழகம் முழுவதும் உள்ள மத்திய அரசின் அலுவலகங்களை இழுத்து மூடும் போராட்டம் நடத்தப்படும் என்றும் வேல்முருகன் எச்சரித்தார்.

சுப்ரீம்கோர்ட் அநீதி
மேலும் காவிரி இறுதி தீர்ப்பில் உச்சநீதிமன்றம் அநீதி இழைத்து விட்டதாகவும் வேல்முருகன் குற்றம்சாட்டினார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன், திருமுருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
-
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்!












Click it and Unblock the Notifications