சின்னமனூரில் மர்மமாய் இறந்து கிடந்த நாய்கள் – பீதியில் மக்கள்

Subscribe to Oneindia Tamil

தேனி: சின்னமனூரில் மர்மமான முறையில் நாய்கள் கூட்டமாக இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகில் உள்ள எரசக்கநாயக்கனூர் இந்திரா நகரில் நேற்று காலை பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து நாய்கள் இறந்து கிடந்தன.

இதைப் பார்த்ததும் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதேபோல் ஏராளமான காகங்களும் இறந்து கிடந்தன.

உயர் ரக நாய்கள்:

தெருநாய்கள் மட்டுமின்றி, ராஜபாளையம், டாபர்மேன், கோம்பை இனத்தை சேர்ந்த உயர்ரக நாய்களும் இறந்து கிடந்தன.

ரசாயனக்கலவை:

இறந்த நாய்களை அதன் உரிமையாளர்கள் தூக்கி பார்த்தபோது அதன் வாயில் ரசாயன கலவை கலந்த கோழி கழிவுகள் இருந்தது தெரிய வந்தது.

விஷம் வைத்து கொலை:

எனவே கோழி இறைச்சி கழிவில் யாரேனும் விஷம் வைத்திருக்கலாம் என்று அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தெருநாய்கள் அதிகம்:

மேலும் கால்நடைத்துறை அலுவலகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்போது பனிக்காலமாக இருப்பதால் தெருநாய்களின் தொந்தரவு அதிகரித்து இருந்தது.

திருட்டுக்காக இருக்குமோ?:

இரவு நேரத்தில் திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் நபர்கள் நாய்களுக்கு இதுபோல விஷம் வைத்து கொன்றனரா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+