சின்னமனூரில் மர்மமாய் இறந்து கிடந்த நாய்கள் – பீதியில் மக்கள்
தேனி: சின்னமனூரில் மர்மமான முறையில் நாய்கள் கூட்டமாக இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகில் உள்ள எரசக்கநாயக்கனூர் இந்திரா நகரில் நேற்று காலை பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து நாய்கள் இறந்து கிடந்தன.
இதைப் பார்த்ததும் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதேபோல் ஏராளமான காகங்களும் இறந்து கிடந்தன.
உயர் ரக நாய்கள்:
தெருநாய்கள் மட்டுமின்றி, ராஜபாளையம், டாபர்மேன், கோம்பை இனத்தை சேர்ந்த உயர்ரக நாய்களும் இறந்து கிடந்தன.
ரசாயனக்கலவை:
இறந்த நாய்களை அதன் உரிமையாளர்கள் தூக்கி பார்த்தபோது அதன் வாயில் ரசாயன கலவை கலந்த கோழி கழிவுகள் இருந்தது தெரிய வந்தது.
விஷம் வைத்து கொலை:
எனவே கோழி இறைச்சி கழிவில் யாரேனும் விஷம் வைத்திருக்கலாம் என்று அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தெருநாய்கள் அதிகம்:
மேலும் கால்நடைத்துறை அலுவலகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்போது பனிக்காலமாக இருப்பதால் தெருநாய்களின் தொந்தரவு அதிகரித்து இருந்தது.
திருட்டுக்காக இருக்குமோ?:
இரவு நேரத்தில் திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் நபர்கள் நாய்களுக்கு இதுபோல விஷம் வைத்து கொன்றனரா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications