சாமி பேசுவதையெல்லாம் மதிக்கத் தேவையில்லை.. இல.கணேசன்
திருச்சி: சுப்பிரமணியம் சாமி பேசுவதற்கெல்லாம் மதிப்பளிக்கத் தேவையில்லை. வைகோவுக்கு கூட்டணியிலிருந்து விலக காரணம் தேவைப்பட்டது விலகி விட்டார் என்று கூறியுள்ளார் மூத்த பாஜக தலைவர் இல.கணேசன்.
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரான இல. கணேசன் திருச்சி வந்திருந்தார். அங்கு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதற்கான காரணங்களை தேடிக்கொண்டிருந்தார். தற்போது வாய்ப்பு கிடைத்ததால் வெளியேறிவிட்டார்.

சுப்பிரமணிய சாமி சுதந்திரமாக கூறிய கருத்துக்கெல்லாம் மதிப்பளித்து கூட்டணியில் இருந்து பாமக விலகாது என்றே நம்புகிறேன்.
நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு, இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது
இந்திய எல்லையைத் தாண்டி போய் மீன் பிடிப்பதால்தான் இலங்கை கடற்படை நமது மீனவர்களை சிறை பிடிக்கிறது. இனிமேல் எல்லை தாண்டிப் போக மாட்டோம் என்று சில மீனவர் அமைப்புகள் உறுதியளித்துள்ளன என்றார் இல.கணேசன்.












Click it and Unblock the Notifications