Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கலுக்கான இ-சேவை மையம்... தமிழகத்தில் துவக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் முழுவதும் 600க்கும் மேற்பட்ட இடங்களில், வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தல், நீக்கல் தொடர்பான இ-சேவை மையம் நேற்று தொடங்கப்பட்டது. அதனை சென்னையில் தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தொடங்கி வைத்தார்.

Door to Door Verification for Poll Roll revision

தமிழகம் முழுவதும் உள்ள தாலுகா அலுவலகங்களில் தமிழ்நாடு அரசு பொது இ-சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில், வருமானவரி சான்று, சாதிச் சான்று, முதல் பட்டதாரி சான்று, இருப்பிட சான்று, நிரந்தர இருப்பிட சான்று, கணவனால் கைவிடப்பட்டோர் சான்று போன்ற சான்றிதழ்கள் ஏற்கனவே வழங்கப்பட்டு வருகின்றன. அண்மையில் ஆதார் அடையாள அட்டைக்கும் இந்த மையங்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

Door to Door Verification for Poll Roll revision

இந்த நிலையில், வாக்காளர் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், திருத்தங்கள் மேற்கொள்ளுதல், பெயர் நீக்குதல் போன்ற வாக்காளர் அடையாள அட்டைக்கு தேவையான விண்ணப்பங்களை விண்ணப்பிக்கும் சேவையும், கூடுதலாக நேற்று முதல் இந்த மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Door to Door Verification for Poll Roll revision

இந்த கூடுதல் சேவையை சென்னை மைலாப்பூர் தாலுகா அலுவலகத்தில், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா நேற்று காலை தொடங்கி வைத்தார்.

அப்போது, "தமிழகம் முழுவதும் உள்ள தாலுகா அலுவலகங்களில் செயல்பட்டு வரும் 600க்கும் மேற்பட்ட அரசு பொது இ-சேவை மையங்களில், இன்று முதல் வாக்காளர் அடையாள அட்டைக்கு பெயர் சேர்த்தல், திருத்தங்கள் மேற்கொள்ளுதல், பெயர்களை நீக்குதல், வாக்காளர் பெயர் பட்டியலில் பெயர் விட்டு போனவர்கள் மீண்டும் விண்ணப்பித்தல் போன்ற சேவைகளுக்கு உரிய படிவங்களை இந்த மையங்களில் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

இந்த மையங்களில் விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக ரசீதுகள் வழங்கப்படும். விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் அதற்கான தீர்வுகள் எட்டப்படும். சேவைக்கு தகுந்தாற்போல், குறைந்தபட்சம் 2 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும்.

Door to Door Verification for Poll Roll revision

தற்போது வரை புதிதாக வாக்காளர் பெயர் சேர்ப்பதற்கு 1 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. வாக்காளர் இறுதி பட்டியல் 2016 மார்ச் மாதம் வெளியிடப்படும். ஒன்றிற்கும் மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தங்களை இந்த இ-சேவை மையங்களில் எல்காட் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனங்கள் இணைந்து மேற்கொள்ளும்" என்று தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+