சாதி ஒழிப்பு புரட்சி போர்வையில் தூண்டிவிடும் தலைவர்களின் பேச்சு இதுதான்...
அகநானூற்று சூழலில் இயல்பாக பிறந்தாலும், நல்ல நோக்கத்திற்காக உருவெடுத்தாலும் காதல் நல்லது தான். ஆனால், இன்றைய சூழலில் காதல்கள் கட்டமைக்கப்படுவதாகவே உள்ளன. அவ்வாறு கட்டமைக்கப்படும் காதல்களுக்கு உள்நோக்கமும் உள்ளன. இவை தான் பெண்களின் பாதுகாப்பை பறித்து, ஆபத்தை உருவாக்குகின்றன. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் இரு காரணங்கள் முக்கியமானவை. அவற்றில் முதலாவது பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் ஆணும், பெண்ணும் செய்ய வேண்டிய பிரதானப் பணி படிப்பது அல்ல... காதலிப்பதே என்ற நச்சு எண்ணத்தை இளைய தலைமுறையின் மனதில் விதைக்கும் திரைப்படங்களும், தொலைக்காட்சித் தொடர்களும் ஆகும். இரண்டாவது, சாதி ஒழிப்பு புரட்சி என்ற போர்வையில் பிற சாதிப் பெண்களை காதலிக்கும்படி தமது சமுதாய இளைஞர்களை தூண்டி விடுவதை முழுநேரத் தொழிலாக சில தலைவர்கள் வைத்திருப்பது.
இளைஞர்களை தூண்டிவிடும் வகையில் இவர்கள் பேசிய பேச்சுக்கள் பொது அரங்கில் ஏற்கனவே வெளியாகியுள்ளன. இப்போது பிறசாதிப் பெண்களை காதலில் வீழ்த்துவது தங்களின் குலப்பெருமை என்பதைப் போல பேசி, அச்செயலை நியாயப்படுத்தியிருக்கிறார் ஒரு தலைவர். அவர் பேசிய மிகவும் அருவருக்கத்தக்க வார்த்தைகளை இந்த கடிதத்தில் மறுபதிப்பு செய்வதே பாவச்செயல் தான்.

ஆனாலும், அந்த வார்த்தைகளில் ஒளிந்திருக்கும் கயமையை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக அவரது உரையின் ஒரு பகுதியை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். இப்படி ஒரு நிலை ஏற்பட்டதற்காக வருந்துகிறேன். இனி அவரது உரை வாசகங்கள்....
''மானங்கெட்ட பிறவிகள்... வெட்கங்கெட்ட பிறவிகள். இவர்களுக்கு எது மானம் என்று கற்பிக்கப்பட்டிருக்கிறது என்றால் பொம்பளை சமாச்சாரம் தான். வேற ஒரு மயிரும் கிடையாது....வேற ஒரு மயிரும் கிடையாது. அவனை திரும்பிப் பார்ப்பதில்லை என்பதால் பொறாமையும் கூட. சிவப்பாக இருக்கிறான்... மீசை வைத்திருக்கிறான்... நல்லா அயர்ன் பண்ணிய சட்டை போடுறான்.
ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஷூ போடுகிறான். பல்லாயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சென்ட் அடித்துக் கொள்கிறான். இவ்வளவும் அடித்துமே அவனைத் திரும்பி பார்க்கவில்லை. ஆனால், ஏழைக் குடும்பத்தில் பிறந்த, தாழ்த்தப்பட்ட சாதியில பிறந்த, சக்கிலியனை, பள்ளனை, பறையனை அவ திரும்பிப் பார்க்கிறாள் என்றால் அதிலிருந்தே தெரிஞ்சுக்க உங்கள் லட்சனம் எவ்வளவுன்னு...
உன் கேடுகெட்ட லட்சனம் எவ்வளவுன்னு புரிஞ்சுக்க... இது ஒன்னே போதாதா... உன் லட்சனம் எவ்வளவுன்னு அந்த பொண்ணே சொல்கிறாள். இவ்வளவும் இருந்தும் ஒன்னுக்கும் லாயக்கில்லை. உங்கிட்ட ஒரு சரக்கும் இல்லை... ஒரு சரக்கும் உங்கிட்ட இல்லை... அவன் (பறையன்) ஏழையாக இருந்தாலும், வறுமையில் வாடுறவனா இருந்தாலும் அவனிடம் சரக்கும், மிடுக்கும் இருக்கிறது.
அதனால நான் அவன் பின்னால போறேன்னு சொல்றா. அப்பவாவது உனக்கு மானம் இருந்தால் தூக்கு போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொள். ஆனால், இவன் என்ன பண்றான்.... இவள் அங்கு போய் 10 மாதம் படுத்திருந்தாலும் பரவாயில்லை... வா... நான் துடைச்சி விட்டுக்கிறேன்; கழுவி விட்டுக்கிறேன். என் கூட வந்து நீ குடும்பம் நடத்துங்கிறான்.''
இது இளைஞர்களை நல்வழிப்படுத்தும் உரையா? இவை பெண் இனத்தை இழிவுபடுத்தும் வார்த்தைகள் அல்லவா?
இதைவிட மோசமான வார்த்தைகளை எந்த தலைவராவது பேச முடியுமா? கடந்த 6 மாதங்களுக்கு மேலாக இந்த உரை அடங்கிய வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
ஆனால், பெண்ணுரிமை பேசும் பெரியார் வழி வந்த தலைவர்களோ, பொதுவுடமை பேசும் தலைவர்களோ, பெண்ணியவாதிகளோ இதைக் கண்டிக்க முன்வராதது மிகவும் வருத்தமளிக்கிறது.
பெண்கள் சமூகத்தின் வரங்கள். ஆனால், சமூகத்தின் சில சாபங்களால், அந்த வரங்கள் பொசுக்கப் படுகின்றன. பெண்களை படிக்க வைக்க வேண்டும்; வாழ்க்கையில் முன்னேற உறுதுணையாக இருக்க வேண்டும். ஆனால், நமது சமுதாயம் பெண்களை பாதுகாக்கவில்லை.
மாறாக, பெண்கள் எனும் மலரை கசக்கி எறியும் கயவர்களுக்கு, இல்லாத காரணங்களைக் கூறி, சாமரம் வீசிக் கொண்டிருக்கிறது. இந்தப் போக்கு உடனடியாக தடுக்கப்படாவிட்டால் தமிழகம் பெண்களுக்கு நரகமாகி விடும் ஆபத்திருக்கிறது.
இந்த ஆபத்துக்கு எதிராக பெண்கள் நலனில் அக்கறையுள்ள அனைவரும் அணி திரள வேண்டும்.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம்












Click it and Unblock the Notifications