சென்னையில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை: ஆட்சியர் அன்புச்செல்வன் தகவல்
சென்னையில் கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்து இருக்கிறார் .
சென்னை: சென்னையில் கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்து இருக்கிறார் .
சென்னையில் நேற்றில் இருந்து மிகவும் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. சென்னையில் பெய்யும் மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது.

தற்போது தியாகராயர் நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இன்று மாலை முதல் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. மயிலாப்பூர்,குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்கிறது.ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டி வருகிறது.கன மழை காரணமாக ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சென்னையின் 70 சதவிகிதமான இடங்களில் நீர் நிரம்பி இருக்கிறது. சென்னையில் கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்து இருக்கிறார் .












Click it and Unblock the Notifications