புதிய அமைச்சரவையில் ஓபிஎஸ்-க்கு நிதி துறை ஒதுக்கீடு.. மாஃபாவுக்கு தமிழ்வளர்ச்சித் துறை
ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் இணைந்துள்ள நிலையில் ஓ. பன்னீர் செல்வம் நிதி மற்றும் வீட்டுவசதித்துறை அமைச்சராகப் பதவி ஏற்றார்.
Recommended Video

சென்னை: இரு அணிகள் இணைந்துள்ள நிலையில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நிதி மற்றும் வீட்டு வசதித் துறைகளின் அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
நீண்ட இழுபறிக்குப் பின்னர் இன்று ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் அதிமுக தலைமை அலுவலகத்தில் இணைந்தன.

இந்த இணைப்பிற்குப் பின்னர், புதிய அமைச்சரவை இன்று மாலை பதவி ஏற்றது. அதில் ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராகப் பதவி ஏற்கிறார். அவரது அணியில் இருந்த மாஃபா பாண்டியராஜன் அமைச்சராகப் பதவி ஏற்றார். இவர்கள் இருவருக்கும் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
துணை முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஓ.பன்னீர் செல்வத்திற்கு, அவர் ஏற்கனவே வகித்து வந்த நிதித் துறை மற்றும் வீட்டு வசதித் துறை அளிக்கப்பட்டுள்ளது.
இதேப் போன்று தொல்லியல் மற்றும் தமிழ்வளர்ச்சித்துறை ஆகியவை மாஃபா பாண்டியராஜனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவை முறையே அமைச்சர் செங்கோட்டையனிடம் இருந்தும், அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனிடம் இருந்தும் எடுத்து இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் பாண்டியராஜனுக்கு தொல்லியல் துறை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications