வாக்காளர்களுக்கு லஞ்சம்: ஆர்கே நகர் தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிட அதிரடி தடை?
வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டின் கீழ் ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தலில் டிடிவி தினகரன் போட்டியிட தேர்தல் ஆணையம் தடை விதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை: வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டின் கீழ் ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக (அம்மா) அணியின் வேட்பாளர் டி.டி.வி. தினகரனை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்ய உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தல் வரும் 12-ந் தேதி நடைபெறுகிறது. இத்தொகுதியில் திமுகவின் மருது கணேஷ், ஓபிஎஸ் அதிமுகவின் மதுசூதனன், சசிகலா அதிமுகவின் தினகரன் உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.
இத்தொகுதியில் தமிழகமே இதுவரை கண்டிராத வகையில் பல கோடி ரூபாய் பணப்பட்டுவாடாவை தினகரன் கோஷ்டி செய்துள்ளது. அத்துடன் தங்க நகைகளையும் வாக்காளர்களுக்கு வாரி இறைத்து லஞ்சமாக கொடுத்துள்ளது.

சிக்கும் ஆதரவாளர்கள்
வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக தினகரன் ஆதரவாளர்கள் பலரும் கொத்து கொத்தாக சிக்கி வருகின்றனர். இத்தொகுதியில் கலவரத்தை உருவாக்கும் வகையில் வெளியூர் குண்டர்களையும் தினகரன் கோஷ்டி இறக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதிரடி ரெய்டு
இந்த நிலையில் தினகரனுக்காக பணப்பட்டுவாடாவை மும்முரமாக நடத்திய அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் ஆர்கே நகர் வாக்காளர்களுக்கு கொடுக்க வைக்கப்பட்டிருந்த டோக்கன்கள் மற்றும் பல லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கோட்டையில் ஆலோசனை
இதனிடையே தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் மற்றும் தேர்தல் உயர் அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதில் ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிடும் டிடிவி தினகரன், வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவரை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

டெல்லி லாபி
இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் டிடிவி தினகரன் தேர்தலில் போட்டியிட முடியுமா? அவரது முதல்வர் நாற்காலி கனவு நிறைவேறுமா என்பது தெரியவரும் என்கின்றன கோட்டை வட்டாரங்கள். அதே நேரத்தில் தம்மை தகுதி நீக்கம் செய்வதைத் தடுக்கும் டெல்லி லாபிகளிலும் தினகரன் தரப்பு தீவிரம் காட்டி வருவதாகவும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
-
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications