வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா? ... ஓ.பி.எஸ்ஸின் பண்ணை வீட்டில் ரெய்டு!
தேனி: வாக்காளர்களுக்கு பணம் தருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வீட்டில் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
லோக்சபா தேர்தலில் தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில் அதிமுக மற்றும் தேமுக நேரடியாக மோதுகிறது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.

இந்நிலையில் கைலாசப்பட்டியில் உள்ள தனது பண்ணை வீட்டில் கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் பணிகள் தொடர்பாக முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார் ஓ.பி.எஸ். இதில் பங்கேற்பதற்காக வந்திருந்த கட்சி நிர்வாகிகளின் வாகனங்கள் நூற்றுக்கணக்கில் அவரது வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்தது.
இது தொடர்பாக தேர்தல் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப் படுவதாக தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் அங்கு நின்றிருந்த கார்களை சோதனை செய்தனர்.
ஆனால், சோதனையின் முடிவில் பணம் எதுவும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்த அதிகாரிகள் புகார் வந்ததால் ஆய்வு செய்ததாகவும், புகாரில் உண்மை இல்லை என்றும் தெரிவித்தனர்.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications