பேரம் பேசியதாக குற்றம் சாட்டிய வைகோ மீது திமுக புகார் .. லக்கானி தகவல்
சென்னை: தேமுதிகவுடன் திமுக பேரம் பேசியதாக கூறி வரும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குறித்து தேர்தல் ஆணையத்திற்கு திமுகவிடமிருந்து புகார் வந்துள்ளதாகவும் அது தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தேர்தல் ஆணையத்திற்கு எந்தப் புகார் வந்தாலும் நாங்கள் அதை டெல்லி தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைப்போம். மேல் நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுக்கும்.

தேர்தல் கூட்டணி பேரம் தொடர்பானக பேசி வரும் வைகோ குறித்த புகாரும் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கடைகளில் வழங்கப்படும் ஷாப்பிங் பைகளில் ஒரு பக்கம் மே 16ம் தேதி தவறாமல் வாக்களியுங்கள் என்ற வாசகத்தை இடம் பெற நடவடிக்கை எடுத்துள்ளோம். கடைக்காரர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
வாக்குச் சாவடிகளில் புகை பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்றார்.












Click it and Unblock the Notifications