ஆத்தா மகமாயி... சிஎம் போஸ்ட்டை காப்பாத்து... எடப்பாடிக்காக 'ஜெகஜோர்' யாகம்!
முதல்வர் பதவியை தக்க வைக்க எடப்பாடி பழனிச்சாமி குடும்பத்தினர் சிறப்பு யாகத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
சென்னை: முதல்வர் பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக எடப்பாடி பழனிச்சாமி சார்பில் அவரது சொந்த ஊரில் சிறப்பு யாகத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.
அதிமுக கோஷ்டிகள் இணைப்பு பேச்சுவார்த்தையில் மும்முரமாக உள்ளன. டெல்லி தகவல்களின்படி முதல்வர் பதவி ஓபிஎஸ் வசம் போக இருக்கிறதாம்.
அமைச்சரவை மாற்றம்
இது தொடர்பாக டெல்லியில் எடப்பாடி பழனிச்சாமிக்கு நேரிலும் நெருக்கடி தர இருக்கிறதாம். அதேபோல் அமைச்சர் விஜயபாஸ்கரை நீக்கிவிட்டு மாஃபா பாண்டியராஜனை அமைச்சரவையில் சேர்ப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறதாம்.
செந்தில் பாலாஜி?
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் அமைச்சரவையில் வாய்ப்பு கிடைக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தம்முடைய முதல்வர் பதவியை தக்க வைத்துக் கொள்ள சொந்த ஊரில் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பு யாகம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
சிறப்பு யாகம்
இதற்கான பொருட்களுடன் சென்னையில் இருந்து சில புரோகிதர்கள் நேற்று இரவு எடப்பாடிக்கு விரைந்துள்ளனர். எடப்பாடி பழனிச்சாமிக்காக அவரது குடும்பத்தினர் இந்த யாகத்தை நடத்துகின்றனர்.
கோவில் கோவிலாக
ஏற்கனவே சில அமைச்சர்கள் தங்களது கழுத்துக்கு கத்தி வந்துவிடக் கூடாது என கோவில் கோவிலாக ஏறி இறங்கி வருகின்றனர். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் சிறப்பு பூஜையும் கூட நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.