கரூர் மாவட்டத்திற்கு செந்தில் பாலாஜியால் அவப்பெயர்.. எடப்பாடி பழனிச்சாமி கடும் விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

கரூர்: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது கடுமையான விமர்சனங்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்வைத்தார்.

கரூரில் இன்று மாலை நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர், எம்.பி தம்பிதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Edappadi Palanisamy slam Senthil Balaji

நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் இதை பேச வேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் இம்மாவட்ட மக்களுக்கு அவரை பற்றி தெரிய வேண்டும் என்பதற்காக பேசுகிறேன்.

Edappadi Palanisamy slam Senthil Balaji

அரவக்குறிச்சி தேர்தலில் செந்தில் பாலாஜி வெற்றி பெற இரவு பகலாக பாடுபட்டோம். ஆனால், செந்தில் பாலாஜி எப்படிபட்டவர் என்பதை புரிய வைத்துவிட்டார். கரூர் மாவட்டத்திற்கு அவப்பெயரை செந்தில் பாலாஜி ஏற்படுத்திவிட்டார். செந்தில் பாலாஜி இந்த ஆட்சிக்கே சவால்விடுகிறார். எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டிக்காத்த கட்சியின் ஆட்சியை கலைக்க வேண்டும் என நினைக்கிறார்.

Edappadi Palanisamy slam Senthil Balaji

தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கும் வரை கட்சி, ஆட்சியை எவராலும் அசைக்க முடியாது. நானும், அண்ணனும் (ஓபிஎஸ்) கொண்டுள்ள அரசியல் அனுபவம்தான் செந்தில் பாலாஜியின் வயது. ஒருவர் மறைந்த பிறகும், அவரது நற்செயல்கள்தான் பேசப்படும். ஆனால், செந்தில் பாலாஜி கெட்ட பெயரை ஈட்டிவிட்டார்.

அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட கள ஆய்வு மேற்கொள்ளப்படும், கரூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பால பணிகளுக்கு ஆய்வு நடத்தப்படும், இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+