கர்நாடகத்தைக் கண்டித்து யாழ்ப்பாணம் இந்திய தூதரகம் அருகே ஈழத் தமிழர் போராட்டம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: கர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதைக் கண்டித்து ஈழத்தில் தமிழர் ஒருவர் தனி நபராக போராட்டம் நடத்தியுள்ளார்.
காவிரி நீரைத் தர மறுத்து தமிழர்களையும், தமிழர்களின் வாகனங்களையும் குறி வைத்து கர்நாடகத்தில் தாக்குதல் நடந்து வருவது மத்திய அரசை உலுக்கவில்லை. ஆனால் தற்போது இது கடல் கடந்து வெளிநாடுகளிலும் எதிரொலிக்கத் தொடங்கி விட்டது. கனடிய தமிழர் பேரவை சார்பில் இன்று போராட்டம் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் ஈழத்தில் ஒரு தமிழர் கர்நாடகத்தைக் கண்டித்து இந்தியத் தூதரகம் அருகே போராட்டம் நடத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். தமிழர்களைத் தாக்கும் கர்நாடகத்தினரைக் கண்டித்து இந்தியத் தூதரகம் அருகே அமர்ந்து அவர் தனி மனிதப் போராட்டம் நடத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications