காவிரி.. மத்திய அரசைக் கண்டித்து மஜக எழும்பூர் ரயில் நிலைய முற்றுகைப் போராட்டம்!
மத்திய அரசைக் கண்டித்து மஜக சார்பில் எழும்பூர் ரயில் நிலைய முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து இன்று மதியம் எழும்பூர் ரயில் நிலைய முற்றுகைப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக மனிதநேய ஜனநாயக் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று மாநிலம் தழுவிய மாபெரும் கண்டன கடையடைப்புப் போராட்டமும் நடந்து வருகிறது.

இதுகுறித்து மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி பேசுகையில், கடையடைப்பு போராட்டத்திற்கு மஜக முழு ஆதரவு வழங்குவதாகவும், போராட்டக்களத்தில் பங்கேற்கவுள்ளதாகவும் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் , இன்று மதியம் மூன்று மணிக்கு மத்திய அரசைக் கண்டித்து எழும்பூர் ரயில் நிலைய முற்றுகைப் போராட்டம் அக்கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது தலைமையில் நடக்கவுள்ளதாக மஜக அறிவித்துள்ளது.
இந்தப்போராட்டத்தில் மத்திய சென்னை, வட சென்னை, தென் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள் திரளாகக் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அக்கட்சி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications