84 வயது பெத்தம்மாள்.. 65 வயது முனியம்மாள்.. களை கட்டிய தூத்துக்குடி பொங்கல் விழா
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே நடந்த பொங்கல் விழாவில் பராம்பாரிய விளையாட்டுகளில் இளைஞர்களும், இளம் பெண்களும் ஆர்வம் காட்டினர்.
தமிழர் திருநாளான தைப்பொங்கலை ஓட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிராமம், நகரங்களில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். இதன்படி விளையாட்டி போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் பெரியவர்கள், பெண்கள், சிறுமிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இளைஞர்களுக்கு வீர விளையாட்டான இளவட்ட கல் தூக்குதல், பானை உடைத்தல், சடுகுடு போன்ற விளையாட்டுகள் நடத்தப்பட்டன. இதில் பலர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். இதில் 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் இளவட்ட கல் தூக்க ஆர்வம் காட்டியது அங்கிருப்போரை ஆச்சரியப்படுத்தியது.

இந்த கல் எடை சுமார் 100 கிலோவுக்கு குறையாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் இளம்பெண்களும் கலந்து கொண்டு மல்லு கட்டியது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் உற்சாகப்படுத்தியது. அவர்களை முதிய பெண்கள் உற்சாகப்படுத்தினர்.
இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்ட கபடி போட்டியும் நடத்தப்பட்டது. மேலும் இளம்பெண்களுக்கு பாண்டி ஆட்டம், சங்கா, தவிடா, திருவை திரித்தல், ஓட்டப்பந்தம், குலை குலையா முந்தரிக்காய் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
திருவை திருத்தல் போட்டியில் 84 வயதான பெத்தமாள், 65 வயதான முனியம்மாள் என்ற பாட்டிகளும் கலந்து கொண்டு பார்வையாளர்களை மெய்சிலிரிக்க வைத்தனர். பாண்டி விளையாட்டில் இளம் தலைமுறையினர் ஆர்வம் காட்டினர்.
காலை முதல் தொடங்கிய வி்ளையாட்டி மாலை வரை தொடர்ந்து நடந்தது குறிப்பிடத்தக்கது. இந்த பழமையை மறக்காமல் இருப்பது தென் மாவட்ட மக்களை உற்சாகத்தில் வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications