என் புகாரின்பேரில்தான் அரவக்குறிச்சியில் தேர்தல் தள்ளிவைப்பு... சொல்கிறார் பாமக வேட்பாளர்
கரூர்: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி யில் தனது புகாரின் அடிப்படையிலேயே, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து தேர்தல் தள்ளிவைக்கப்பட்டதாக பாமக வேட்பாளர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அந்த தொகுதியின் பா.ம.க. வேட்பாளரான பாஸ்கரன் கூறுகையில், அரவக்குறிச்சி சட்ட சபைத் தொகுதியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வாக்காளர்களுக்கு பணம் பட்டு வாடா செய்யத் தொடங்கிவிட்டனர். இந்த பணப்பட்டுவாடாவை தடுப்பதற்காக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு இணையதளம் மூலமாக புகார் மனு அனுப்பினேன்.

தேர்தல் விதி முறைகளை மீறி வேட்பாளர்கள் பணம் செலவு செய்துள்ளனர். எனவே அவர்களை தகுதிநீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்திருந்தேன். இந்த புகாரின் அடிப்படையிலேயே அரவக்குறிச்சிசட்டமன்ற தேர்தலை வருகிற 23-ந் தேதிக்கு இந்திய தேர்தல் ஆணையம் தள்ளி வைத்துள்ளது.
அரவக்குறிச்சியில் தனது புகாரை ஏற்றுக்கொண்டு, சோதனை செய்த தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அரவக்குறிச்சியில் வாக்களர்களுக்கு ரூ. 1000 முதல் 2 ஆயிரம் வரை பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது இதே போல் தமிழகத்தின் மற்ற தொகுதிகளிலும் பணம் பட்டு வாடா செய்யப்பட்டுள்ளது. எனவே தமிழக சட்டமன்ற தேர்தலையே தள்ளி வைக்க வேண்டும் .
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு 19-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தேர்தல் முடிவு 25-ந் தேதிக்கு அறிவிக்கப்பட உள்ளதால் அன்றைய தினமே தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் இடைத் தேர்தல் போல் ஆகிவிடும் என பாஸ்கரன் கூறினார்.
இதற்கிடையே, அதிமுக கூட்டணியில் உள்ள இந்திய குடியரசு கட்சியின் மாநில துணை தலைவர் ஆனந்தராஜ் கூறுகையில், அரவக்குறிச்சி சட்டசபை தொகுதியில் அதிமுக வேட்பாளர் தரப்பில் இருந்து எந்தவிதமான பணமோ, பரிசு பொருட்களோ பறிமுதல் செய்யப்படவில்லை.
தோல்வி பயம் காரணமாக திமுகவினர் தேர்தல் ஆணையத்தை தூண்டி விட்டு சதி செயலில் ஈடுபட்டுள்ளனர். எனவே தேர்தல் ஆணையத்தின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இல்லையெனில் தமிழக சட்ட மன்ற தேர்தல் முடிவை 25-ந் தேதிக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications