கோவை அருகே காம்பவுண்ட் சுவற்றில் கார் மோதி 4 பேர் சாவு
கோவை: கோவை அருகே காம்பவுண்ட் சுவற்றில் கார் மோதியதில் பார்முலா-4 வீரர்கள், இன்ஜினியரிங் மாணவர்கள் உட்பட நால்வர் உயிரிழந்தனர்.
கோவை புறநகர் பகுதியில் போத்தனூர்-செட்டிப்பாளையம் சாலையில் இன்று காலை காம்பவுண்ட் சுவற்றில் கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், கோவை சுந்தரபுரம் எல்ஐசி காலனியை சேர்ந்த பிரதீப் (21), நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த சனத்குமார் (22), குனியமுத்தூர் பிகேபுதூரை சேர்ந்த சாமிநாதன் (35) மற்றும் சரவணகுமார் (20) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சனத்குமார் குனியமுத்தூரிலுள்ள ஸ்ரீ கிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரியில் இறுதியாண்டு பி.இ. படித்து வந்தார். சாமிநாதன் மற்றும் சரவணகுமார் ரேஸ் கார் மெக்கானிக்காக வேலை பார்த்துவந்தனர். பிரதீப் பி.இ படிப்பை இந்தாண்டுதான் முடித்திருந்தார். சம்பவம் நடந்த போது காரை பிரதீப்தான் ஓட்டிச் சென்றுள்ளார். சனத்குமாரும், பிரதீப்பும் பார்முலா-4 வகை கார் பந்தைய வீரரர்கள் என்று கூறப்படுகிறது.
செட்டிப்பாளையத்தில் இன்று நடைபெறும் பார்முலா-4 கார் பந்தையத்தில் பங்கேற்க அதிவேகமாக சென்றபோது விபத்தில் சிக்கி 4பேரும் பலியாகியுள்ளனர். காரில் பயணித்த சக நண்பர் தீபக் மட்டும் படுகாயங்களுடன் உயிர்தப்பியுள்ளார். சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications