விழுப்புரத்தில் ரூ.1000 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்: ஈபிஎஸ் அறிவிப்பு
கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.1000 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் விழுப்புரம் மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தார்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையாட்டி, காய்கனிகளால் அமைக்கப்பட்ட எம்ஜிஆர் திருவுருவம், புகைப்பட கண்காட்சியை எடப்பாடி பழனிச்சாமி பார்வையிட்டார்.
எம்.ஜி.ஆர். திருவுருவப்படத்தை திறந்து வைத்தார். பல்வேறு அரசு துறைகளைச் சார்ந்த முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைத்த ஈபிஎஸ், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
விழாவில் பேசிய முதல்வர் ஈபிஎஸ், காட்டில் நரி செய்யும் சூழ்ச்சி போன்று நாட்டிலும் பலர் சூழ்ச்சி செய்கின்றனர். எனவே, கட்சி தொண்டர்கள் ஒரே அணியில் இருந்து எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்கவேண்டும் என்றார்.
இந்த ஆட்சி மக்களுக்கான ஆட்சி, மக்களுக்காக உருவாக்கப்பட்ட ஆட்சி, இது உங்கள் ஆட்சி. சூழ்ச்சி ஒருபோதும் வெற்றி பெறாது என்று கூறிய அவர், ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது என்று கூறினார்.
விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். விழுப்புரம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, விக்கிரவாண்டி, சங்கராபுரம் பேரூராட்சிகள், மரக்காணம், திருவெண்ணை நல்லூர் பகுதியைச் சேர்ந்த மக்கள் இதன்மூலம் பயன்பெறுவார்கள்.
நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யப்படும் என்றும் கூறினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. மேலும் விழுப்புரத்தில் ரூ.198 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறினார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications