நீட் தேர்வு மசோதாக்களுக்கு ஒப்புதல் பெற்றுத்தாருங்கள் - மோடிக்கு முதல்வர் மீண்டும் கடிதம்
தமிழக அரசின் 2 நீட் மசோதாக்களுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற்றுத்தரவேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை: நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிப்பது தொடர்பாக தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெற்றுத் தர வேண்டும் என்று பிரதமர் மோடி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்ககோரி கடந்த பிப்ரவரி மாதம் சட்டசபையில் ஒருமனதாக மசோதா நிறைவேற்றப்பட்டது. நீட் தேர்வினால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு இந்த சட்டமசோதா கொண்டு வரப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இருப்பினும் தற்போது வரை தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை. மத்திய அரசும், சுப்ரீம் கோர்ட்டும் இந்த விவகாரத்தில் திட்டவட்டமாக உள்ளது. இதனால் தமிழக மாணவர்கள் குழப்பமான சூழலில் உள்ளனர்.
இந்நிலையில், நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிப்பது தொடர்பாக தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெற்றுத் தர வேண்டும் என்று பிரதமர் மோடி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
முதல்வர் தமது கடிதத்தில், தமிழகத்தில் மருத்துவக்கல்லூரி சேர்க்கையில் வெளிப்படைத்தன்மை தொடர வேண்டும். தமிழகத்தில் நீட் தேர்வால் 98 சதவீதம் மாணவர்கள் பாதிப்படைவார்கள்.
மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை மசோதாவிற்கு குடியரசுத்தலைவரின் ஒப்புதலை பெற்று வேண்டும். தமிழகத்தில் நீட் தேர்வை தவிர்ப்பது குறித்து பிரதமர் விரைவில் முடிவு எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். நீட் தேர்விலிருந்து விலக்களிக்க மாநில அரசு சட்டம் இயற்ற நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications