ரவுடிகளை சுட போலீசுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? - எவிடென்ஸ் கதிர்
என்கவுண்டர் செய்ய போலீசுக்கு அதிகாரம் கொடுத்தது யார் என்று மனித உரிமை ஆர்வலர் எவிடென்ஸ் கதிர் கேட்டுள்ளார்.
Recommended Video

மதுரை: மதுரையில் 2 ரவுடிகளை காவல்துறையினர் சுட்டுக்கொன்று விட்டனர். இதற்கு காவல்துறையினர் தரும் விளக்கம் நம்ப முடியவில்லை என்று மனித உரிமை ஆர்வலரும், எவிடென்ஸ் அமைப்பின் நிறுவனருமான கதிர் கூறியுள்ளார்.
மதுரையில் உள்ள சிக்கந்தர் சாவடி பகுதியில் தங்கியிருந்த ரவுடிகளான சகுனி கார்த்தி மற்றும் முத்து இருளாண்டி ஆகிய இருவரையும் போலீஸார் சுட்டுக் கொன்றுள்ளனர்.

முத்து இருளாண்டி தொழிலதிபர்களை கடத்திச் சென்று மிரட்டி பணம் பறிப்பதையே தொழிலாக செய்து வந்ததாக கூறப்படுகிறது. இவர் மீது 19 கொலை வழக்குகள் உள்ளதாக தெரிகிறது.
இதே போன்று ரவுடி சகுனி கார்த்தி மீதும் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன. மதுரை மாநகரில் 5 ஆண்டுகளுக்கு முன்னர் என்கவுண்டர் நடந்துள்ளது.
மனித உரிமைகள் ஆணையத்தின் எதிர்ப்பு காரணமாக இதுவரை என்கவுண்டர் நடக்கவில்லை, இந்நிலையில் பட்டபகலில் நடந்துள்ள இந்த என்கவுண்டர் மதுரை மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸ் வருவதை அறிந்த சென்னையை அயானாவரத்தை சேர்ந்த ரவுடியான மாயக்கண்ணன் தப்பிச் சென்று விட்டதாகவும், அவன் மீது 10க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் உள்ளதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
சுட வேண்டாம் நாங்கள் போலீஸ் என்று கூறியும் ரவுடிகள் சுட முயன்றனர். இதனையடுத்தே தற்காப்புக்காகவே போலீசார் சுட்டனர். இருவரின் உடலும் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே இந்த என்கவுண்டர் குறித்து கருத்து கூறியுள்ள எவிடென்ஸ் அமைப்பின் நிறுவனர் கதிர் தனது அதிருப்தியை பதிவு செய்துள்ளார். மதுரை நகருக்குள் அதுவும் வீட்டிற்குள் துப்பாக்கியை வைத்திருந்தனர் என்பதை நம்பமுடியவில்லை என்று கூறியுள்ளார்.
மதுரை என்கவுண்ட்டர்கள் அனைத்தும் போலியானவை. மதுரையில் பட்டப்பகலில் என்கவுண்ட்டர்கள் நடத்தப்பட்டுள்ளது. இந்த என்கவுண்ட்டர் குறித்த போலீஸ் அளித்துள்ள விளக்கம் நம்ப முடியவில்லை. சுட்டுக்கொல்வதற்கு அனுமதி கொடுத்தது யார் என்றும் கேட்கிறார் எவிடென்ஸ் கதிர். சாதாரண மனிதர்கள் சுட்டால் கொலை வழக்கு போடுகின்றனர். காவல்துறையினர் சுட்டால் மட்டும் தற்காப்புக்காக என்று சொல்வதா என்றும் அவர் கேட்டுள்ளார்.
அதே நேரத்தில் இதுபோன்ற என்கவுண்டர்கள் தேவைதான் என்றும் காவல்துறையினருக்கு ராயல் சல்யூட் என்றும் ஓய்வு பெற்ற காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ரவுடிகளை சுட்டுக்கொன்றால்தான் அமைதி பூங்காவாக தமிழகம் மாறும் என்றும் கூறியுள்ளனர். என்கவுண்டர் மூலம்தான் சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்படும் என்று கூறியுள்ளனர்.
-
தமிழ்நாடு புதிய டிஜிபி நியமனம் எப்போது? மார்ச் 20-ல் யுபிஎஸ்சி கூட்டம் - உச்ச நீதிமன்றத்தில் தகவல்! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது












Click it and Unblock the Notifications