எம்.எல்.ஏக்களை மிரட்டி ஆதரவு கடிதம் வாங்குவதா? ஈ.வி.கே.எஸ். குற்றச்சாட்டு
அடைத்து வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்களிடம் மிரட்டி ஆதரவு கடிதம் பெறப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: அடைத்து வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்களிடம் மிரட்டி ஆதரவு கடிதம் பெறப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சி பன்னீர்செல்வத்தையோ, எடப்பாடி பழனிச்சாமியையோ ஆதரிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிமுக எம்.எல்.ஏக்களை கூவத்தூர் ரிசார்ட்டில் சிறைவைத்துள்ளது மன்னார்குடி கோஷ்டி. எப்படியும் முதல்வர் பதவியை கைப்பற்றி விடலாம் என நினைத்த சசிகலாவுக்கு சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு பாதகமாக அமைந்தது. இதனால் சசிகலாவின் முதல்வர் கனவு தகர்ந்தது. இதையடுத்து சசிகலாவின் விசுவாசியான எடப்பாடி பழனிச்சாமியை சட்டமன்ற குழுத் தலைவராக தேர்ந்தெடுத்து முதல்வராக்குவதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது.
இதனிடையே எம்.எல்.ஏக்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள் என்று சசிகலா தரப்பு அதிமுகவினரும், மிரட்டி கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று பன்னீர் செல்வம் ஆதரவு அதிமுகவினரும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்களிடம் மிரட்டி ஆதரவு கடிதம் பெறப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இன்னும் அதிமுக சசிகலா பிடியில் தான் உள்ளது. அவரது பிடியில் இருக்கும் வரை அதிமுகவை மக்கள் ஏற்க மாட்டார்கள். காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை சசிகலாவுக்கும் ஆதரவு இல்லை, ஓ.பன்னீர் செல்வத்துக்கும் ஆதரவு இல்லை. திமுகவின் நிலைப்பாட்டை பொறுத்து காங்கிரஸ் முடிவை அறிவிக்கும் என்றார்.
-
விசில் + தென்னந்தோப்பு.. விஜய்யுடன் கூட்டணி அமைப்பீர்களா? சசிகலா நேரடியாக சொன்ன பதில்! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங்












Click it and Unblock the Notifications