அடுத்த 2 நாட்களில் தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்
சென்னை: அடுத்த 2 நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வட கிழக்குப் பருவ மழைக்காலம் தொடங்கி விட்டபோதிலும் இன்னும் சூடு பிடிக்கவில்லை. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்னும் நல்ல மழை பெய்யவில்லை.
இந்த நிலையில் தற்போது வங்கக் கடலில் இலங்கைக்கு அருகே குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதால் மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இது நிச்சயம் நல்ல மழையைத் தரும் என்ற நம்பிக்கையில் அவர்கள் உள்ளனர்.

இதுகுறித்து வானிலை மையம் தெரிவிக்கையில், இலங்கை அருகே வங்க கடலில் குறைந்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று இரவில் லேசான மழை பெய்தது. தீபாவளியன்று மழை பெய்யாததால் மக்கள் சந்தோஷமாக வெடி வெடித்துக் கொண்டிருந்தனர். பகல் முழுவதும் மழை இல்லாத நிலையில், மாலைக்கு மேல் லேசான மழை பெய்தது.












Click it and Unblock the Notifications