வறுமையின் கொடுமை: சென்னையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தீக்குளித்து தற்கொலை
சென்னை: குடும்பத்தலைவர் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் சென்னையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தீக்குளித்து தற்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வறுமை சூழ்நிலையால் 3 பேரும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை அருகே மணலியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். ஜோதி, வேதகிரி, ஜெபகனி ஆகியோர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடும்பத்தலைவரான ஜெபகனிக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே, அவரால் வேலைக்கு செல்ல முடியாமல் போனது. எனவே குடும்பத்தில் வறுமை சூழல் காரணமாக விரக்தியடைந்த மூன்று பேரும் தீக்குளித்து உயிரை மாய்த்துக்கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை தற்கொலைகள்
தமிழகத்தில் தற்கொலை செய்து கொள்பவர்களின் பட்டியலில் சென்னை முதல் இடத்தில் இருக்கிறது ஒரு புள்ளி விபரம் கூறுகிறது.
கடந்த ஜூலை மாதம் சென்னை கொளத்தூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கொளத்தூர் வி.வி.நகர் 2வது தெருவைச் சேர்ந்த சாய்ராம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவரிடம் குமாஸ்தாவாக பணியாற்றி வந்தார். கடந்த ஜூலை மாதம் சாய்ராம் தூக்கிட்டுக் கொண்டும் , அவரது மனைவி மற்றும் மகள் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
அதிகரிக்கும் தற்கொலைகள்
ஸ்நேகா என்ற தனியார் அமைப்பு அண்மையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உலக சுகாதார நிறுவனத்தின் மூலம் எடுக்கப்பட்ட இந்தியாவில் தற்கொலைகள் சம்பந்தமான புள்ளி விவரங்களை வெளியிட்டது. தற்கொலையில் 23.5 சதவீதத்துடன் தமிழகம் மாநில அளவில் முதலிடத்திலும், மாநகர அளவில் சென்னையும் முதலிடத்தை வகிக்கின்றது. தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் 2015ம் ஆண்டு அறிக்கையிலும் தமிழகம் மற்றும் சென்னையே முதலிடம் வகிக்கின்றது. ஒவ்வொரு ஆண்டும் தற்கொலைகள் குறையாமல் சீராக அதிகரித்து வந்திருப்பதாக தெரிவிக்கின்றனர்.
மனஅழுத்தம்
சமூக பொருளாதார காரணிகள், குடும்ப சூழல், வேலை பார்க்கும் இடங்களில் இருக்கின்ற நெருக்கடி உள்ளிட்டவை தற்கொலையை நோக்கி மனிதர்களை திருப்புவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நகர மயமாதலுக்குப் பிறகான சூழல் முற்றிலும் மாறிய நிலையில் புற சூழல் மனிதர்களை அழுத்தமானதொரு மன நிலைக்கு தள்ளிவிடுகின்றது.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications