கருகிய பயிரைக் கண்டு அதிர்ச்சி.. ஆவடியில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை முயற்சி
கருகிய பயிர்களைக் கண்ட அதிர்ச்சியில் தற்கொலை செய்து கொள்ளும் துயரம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆவடியில் விவசாயி குமார் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள
சென்னை: தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகியதைக் கண்ட அதிர்ச்சியில்சென்னை ஆவடியைச் சேர்ந்த விவசாயி குமார் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு மழை வழக்கத்தைவிட 60 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. காவிரியில் இருந்து கிடைக்க வேண்டிய தண்ணீரும் முறையாக தமிழகத்திற்கு கிடைக்கவில்லை. இப்படி, இயற்கையாகவும், செயற்கையாகவும் உருவான தண்ணீர் தட்டுப்பாட்டால் தமிழகத்தில் வறட்சி நிலவி வருகிறது. இந்த வறட்சிக்கு இதுவரை 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்நிலையில், இன்று காலை ஆவடி அருகே உள்ள தண்டுரை என்ற கிராமத்தில் விவசாயி குமார் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தனது வயலில் பயர்கள் காய்ந்து கருகியதைக் கண்டு மன வேதனையில், வயலுக்கு அடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பூச்சிக் கொல்லி மருந்ததை குடித்து தற்கொலை முயற்சியில் குமார் ஈடுபட்டார்.
விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்த விவசாயி குமாரை, அவரது உறவினர், அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காவிரி டெல்டா பகுதிகளில் மட்டுமே நடந்து வந்த விவசாய தற்கொலைகளும், மாரடைப்பு மரணங்களும் மெல்ல தமிழகம் முழுவதும் பரவி வருகிறது. இதனால் விவசாயிகளின் மத்திய ஒரு வித அச்சம் நிலவி வருகிறது. தமிழக அரசு வறட்சி பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு நிவாரணத்தை அறிவிக்க உள்ளது என்றாலும், உயிரிழந்த விவசாயிகள் தொடர்பாக இன்னும் வாயே திறக்கவில்லை என்ற மனக்குமுறலில் உள்ளனர் விவசாயிகளும், அவர்களது குடும்பத்தினரும்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications