பயிர் காப்பீட்டு தொகை வழங்குவதில் இழுபறி- கோவில்பட்டியில் விவசாயிகள் மறியல்
பயிர் காப்பீட்டு தொகை வழங்காமல் இழுத்தடித்து வருவதால் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தூத்துக்குடி: பயிர் காப்பீட்டு தொகை வழங்காமல் இழுத்தடிப்பதை கண்டித்து கோவில்பட்டியில் விவசாயிகள் தாலுகா அலுவலகம் முன்பு சாலையில் படுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பருவமழை பொய்து போனதால் கடந்த இரு ஆண்டுகளாக விவசாயிகள் கஷ்டத்தில் இருந்து வருகின்றனர். இதற்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்க கோரி மானவரி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதை உடனடியாக வழங்க கோரி கோவில்பட்டி அருகே கடந்த மாதம் 11ம் தேதி அடையாள போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடந்தது. அதில் காப்பீட்டு தொகை விரைவில் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனால் சொன்னபடி இதுவரை காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
காப்பீட்டு தொகை வழங்காமல் இழுத்தடித்து வந்ததால் ஆவேசம் அடைந்த விவசாயிகள் மாலை கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு சாலையில் படுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீண்ட நேரமாகியும் அதிகாரிகள் எட்டி பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மேலும் கோபம் அடைந்த விவசாயிகள் இரவு 7 மணி வரை சாலைகளை விட்டு விலகவில்லை. போராட்டம் காரணமாக அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் கேட்டு கொண்டும் விவசாயிகள் மசியவில்லை.
இதனால் அவர்கள் திகைப்பில் என்ன செய்வது என்று தெரியாமல் கையை பிசைத்தனர். இதுகுறித்து அவர்கள் தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் இரவு 7.10 மணிக்கு விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து விவசாயிகள் தற்காலிகமாக போராட்டத்தை கை விட்டு கலைந்து சென்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications