திருச்சி பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

திருச்சியில் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்-வீடியோ

    திருச்சி: திருச்சியில் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    குறுவை சாகுபடி வரும் அக்டோபரில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் அந்த சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    Farmers protest in Trichy PWD department

    ஆனால் இதுவரை திறந்துவிடப்படவில்லை. இதையடுத்து தென்னிந்திய நதிகள் இணைப்பு தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் பொதுப் பணித் துறை அலுவலகத்துக்கு வந்தனர்.

    அங்கு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அலுவலக வாயிலில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து அய்யாக்கண்ணு பேசுகையில் குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும். சிறிதளவு தண்ணீர் விட்டால் ஆடு, மாடு மேய்வதற்கு உதவும். இந்த மாதத்துக்குள் கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட்டால் குறுவை சாகுபடி செய்யலாம் என்றார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+