Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வால்பாறை வனப்பகுதியில் புலி, முள்ளம்பன்றி பலி... சண்டையிட்டு உயிரிழந்ததாக தகவல்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை மாவட்டம் வால்பாறை வனப்பகுதியில் புலியும், முள்ளம்பன்றியும் சட்டையிட்டதில், அவை இரண்டும் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை வனச்சரக பகுதிக்குட்பட்ட வனப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தைப்புலி, காட்டெருமை, முள்ளம்பன்றி போன்றவை தேயிலை தோட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் இரை தேடி சுற்றித்திரிகின்றன.

Fight between Tiger vs Porcupine , both were dead at the end

இந்நிலையில், வால்பாறை குரங்குமுடி எஸ்டேட் பகுதிக்கு அருகே உள்ள மானாம்பள்ளி வனச்சரக பகுதியில் உள்ள 6-ம் எண் தேயிலை தோட்டத்தையொட்டிய வனப்பகுதியில் நேற்று மதியம் புலி ஒன்று இறந்து கிடந்துள்ளது. அங்கு தேயிலை பறிக்க சென்ற தொழிலாளர்கள் ஒருவர் இதை பார்த்து எஸ்டேட் நிர்வாகத்துக்கு தகவல் தெரிதுள்ளார். இதையடுத்து, வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து வனச்சரகர் சேகர், வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த புலியை பார்வையிட்டனர்.

அப்போது அங்கு இறந்து கிடந்த புலியின் உடலில் பலத்த காயம் இருந்தது தெரியவந்தது. மேலும் சிறிது தொலைவில் முள்ளம்பன்றி ஒன்றும் அங்கு இறந்து கிடந்தது. இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது: இறந்த புலிக்கு 8 வயது இருக்கும். இரை தேடி தேயிலை தோட்டத்துக்கு வந்தபோது புலிக்கும், முள்ளம்பன்றிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் முள்ளம்பன்றி இறந்துள்ளது. சண்டையில் பலத்த காயமடைந்த புலியும் இறந்துள்ளது என்று கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+