ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதிக்கும் பெப்சி ஊழியர்கள்.. இன்று படப்பிடிப்புகள் ரத்து
சென்னை, மெரினாவில் ஜல்லிக்க்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு பெப்சி ஊழியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்று போராட்டம் நடைபெறும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது. மாணவர்கள் நடத்தும் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவாக படப்பிடிப்புகள் அனைத்தும் இன்று ஒருநாள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளிக்க கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. அலங்காநல்லூரில் தொடங்கிய எழுச்சிப் போராட்டம் சென்னை, கோவை, புதுக்கோட்டை, புதுச்சேரி என பல பகுதிகளுக்கும் பரவியது. சென்னை மெரினாவில் நடந்து வரும் போராட்டத்துக்கு நடிகர், நடிகைகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நாளை போராட்டம் நடைபெறும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது. மாணவர்கள் நடத்தும் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவாக இன்று திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி சம்பந்தப்பட்ட எந்த பணிகளும் நடைபெறாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications