ஜனவரி 5இல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு – தேர்தல் ஆணையம் அறிவிப்பு
நெல்லை: தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5 ஆம் தேதி வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்படும். இந்த ஆண்டு 1.1.2015 ஆம் தேதியை தகுதியாக கொண்டு வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்காக தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
அன்று முதல் 18 வயது நிரம்பிய வாக்காளர்கள், பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், பெயர் திருத்தம் செய்ய விரும்புவர்கள் விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதற்காக வரைவு வாக்காளர் பட்டியல் தாலுகா அலுவலகம், ஆர்.டி.ஓ அலுவலகங்களில் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. இது மட்டுமல்லாது கிராம நிர்வாக அலுவலகங்களிலும் வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டிருந்தது.
இதை தொடர்ந்து 18 வயது நிரம்பிய ஏராளமான வாக்காளர்கள் தங்களது பெயரை பதிவு செய்ய விண்ணப்பித்தனர். நவம்பர் 10 ஆம் தேதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் பெறப்பட்டது.
பின்னர் அந்த பட்டியல் சரியாக உள்ளதா என வாக்கு சாவடி அலுவலர்களால் வீடு வீடாக சென்று சரி பார்க்கப்பட்டது. இதை தொடர்ந்து அந்தந்த தொகுதி மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இறுதி ஆணை பிறப்பித்தனர்.
தற்போது அனைத்து மாவட்டங்களிலும் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. வரும் 5 ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட கலெக்டர்களால் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
இதை ஆர்டிஓ அலுவலகம், தாலுகா அலுவலகம், மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும் பொதுமக்கள் பார்வையிட்டு தங்கள் பெயர் இருக்கிறதா என்பதை சரிபார்த்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications