ஜனவரி 5இல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு – தேர்தல் ஆணையம் அறிவிப்பு
நெல்லை: தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5 ஆம் தேதி வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்படும். இந்த ஆண்டு 1.1.2015 ஆம் தேதியை தகுதியாக கொண்டு வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்காக தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
அன்று முதல் 18 வயது நிரம்பிய வாக்காளர்கள், பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், பெயர் திருத்தம் செய்ய விரும்புவர்கள் விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதற்காக வரைவு வாக்காளர் பட்டியல் தாலுகா அலுவலகம், ஆர்.டி.ஓ அலுவலகங்களில் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. இது மட்டுமல்லாது கிராம நிர்வாக அலுவலகங்களிலும் வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டிருந்தது.
இதை தொடர்ந்து 18 வயது நிரம்பிய ஏராளமான வாக்காளர்கள் தங்களது பெயரை பதிவு செய்ய விண்ணப்பித்தனர். நவம்பர் 10 ஆம் தேதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் பெறப்பட்டது.
பின்னர் அந்த பட்டியல் சரியாக உள்ளதா என வாக்கு சாவடி அலுவலர்களால் வீடு வீடாக சென்று சரி பார்க்கப்பட்டது. இதை தொடர்ந்து அந்தந்த தொகுதி மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இறுதி ஆணை பிறப்பித்தனர்.
தற்போது அனைத்து மாவட்டங்களிலும் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. வரும் 5 ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட கலெக்டர்களால் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
இதை ஆர்டிஓ அலுவலகம், தாலுகா அலுவலகம், மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும் பொதுமக்கள் பார்வையிட்டு தங்கள் பெயர் இருக்கிறதா என்பதை சரிபார்த்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications