போலீசைக் கண்டித்து மீனவர்கள் மறியல்... ஈசிஆரில் போக்குவரத்து தேக்கம்

சென்னை கானாத்தூர் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் காவல்துறைக்கு எதிராக முழக்கமிட்டு வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கானாத்தூரிஙல போலீசாரைக் கண்டித்து மீனவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து முடங்கியுள்ளது.

சென்னை மெரினாவில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது தடியடி நடத்தினர். பெண்கள், தாய்மார்கள் என போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அனைவரையும் போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Fishermen conducting road blockaded in ECR for condemns police

இந்நிலையில் மெரினாவில் மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டிக்கும் விதமாக கிழக்கு கடற்கரை சாலையில் கானாத்தூர் அருகே மீனவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதற்கு அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சுமார் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் போலீசாருக்கு எதிராக முழக்கமிட்டனர். மீனவர்களின் இந்தப் போராட்டத்தால் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்துக்கிடக்கின்றன. மாணவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதால் பல இடங்களில் பதற்றம் நிலவுவத குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+