தமிழக- இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை 27ந் தேதிக்கு ஒத்திவைப்பு
சென்னை: தமிழக - இலங்கை மீனவர் விவகாரம் குறித்து இரு நாடுகளுக்கு இடையே 20ந் தேதி நடைபெற இருந்த பேச்சவார்த்தை 27ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழக மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண இலங்கை மீனவர்களுடன் சென்னையில் 20-ந் தேதி பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்திய அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும் இலங்கை பிரதிநிதிகளை தேர்வு செய்ய மத்திய அரசிடம் இலங்கை கால அவகாசம் கோரியது.

இதையடுத்து, இலங்கை அரசின் வேண்டுகோள் குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது. மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று, ஜனவரி 20ந் தேதி நடைபெற இருந்த பேச்சுவார்த்தையை தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒத்திவைத்துள்ளார்.
இதனால், இலங்கை - தமிழக மீனவர்களிடையேயான பேச்சுவார்த்தை ஜனவரி 27ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications