கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. வாழை தோட்டத்துக்குள் தண்ணீர் புகுந்தது
தஞ்சை: கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு ஒரு லட்சத்து 88 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்வதால், கரையோர கிராமங்களில் உள்ள வாழை தோட்டத்துக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால், 200 ஏக்கர் பரப்பளவிலான வாழை மரங்கள், தண்ணீரில் மூழ்கியும், சாய்ந்தும் மிதப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Recommended Video
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஆறு, குளம் உள்ளிட்டவைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது, தஞ்சை கொள்ளிடம் ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மேட்டுர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததை அடுத்து மேட்டுர் அணையில் இருந்து வினாடிக்கு 2 லட்சம் கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது.

மேலணை மற்றும் கல்லணை வழியாக கொள்ளிடத்தில் வினாடிக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், ஆற்றில் கூட்டு குடிநீர் தேவைக்காக வெட்டப்பட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நீர் ஆதாரங்களான கிணறுகள் முழுவதுமாக மூழ்கிவிட்டது. பொதுமக்கள் கொள்ளிடம் ஆற்று பகுதிக்கு செல்ல வேண்டாம் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.
வெள்ளப் பெருக்கு காரணமாக தஞ்சை மாவட்டம் ஆச்சனூர், மருவூர். சாத்தனூர், வடுகக்குடி உள்ளிட்ட கொள்ளிடம் கரையோர கிராமங்களில் வாழை தோட்டத்திற்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதில், சுமார் 200 ஏக்கர் பரப்பளவிலான வாழை மரங்கள் மார்பளவு நீரில் மூழ்கி உள்ளன. மேலும். வேர் அழுகல் நோய் ஏற்பட்டு வாழை மரங்கள் சாய்ந்து தண்ணீரில் மிதக்கின்றன.
தொடர் மழையுடன், வெள்ள நீரும் அதிகரித்து வருவதால் ஏக்கர் ஒன்றுக்கு இரண்டு லட்சம் ரூபாய் செலவு செய்து உள்ள நிலையில், மிக பெரிய வருவாய் இழப்பு ஏற்படும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மூன்றாவது முறையாக கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பயிர்கள் மூழ்கியதால் இப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நெல்லுக்கு உள்ளது போல் வாழைக்கும் பயிர் காப்பீடு நடைமுறைப்படுத்த வேண்டும். நீரில் மூழ்கி உள்ள வாழை தோட்டங்களை தோட்டக்கலை துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என வாழை விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications