தூத்துக்குடி துறைமுகத்தில் சிக்கியது ரூ.1 கோடி மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகள்!
தூத்துக்குடி: தூத்துக்குடி துறைமுகத்திற்கு கப்பலில் வந்த கண்டெய்னரில் இருந்து ரூ.1 கோடிக்கும் மேற்பட்ட மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
துபாய் நாட்டில் உள்ள ஜபால் அலி துறைமுகத்திலிருந்து என்எஸ்என் குஜராத் என்ற கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்தது. இந்த கப்பலில் வந்த கண்டெய்னர்களை மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் அதிரடி ஆய்வு செய்தனர். அதில் கேரளாவை சேர்ந்த ஓரு நிறுவனத்தின் பெயரில் வந்த கண்டெய்னர் மற்றும் அதற்குரிய ஆவணங்களை சரி பார்த்தனர். அந்த ஆவணத்தில் ஜிப்சம் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருந்தது. இதில் வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அதிகாரிகள் அந்த கண்டெய்னரை திறந்து சோதனை செய்தனர். அந்த பெட்டியில் இந்தியாவில் தடை செய்யப்பட்டிருந்த இந்தோனேஷிய தயாரிப்பான குடங்கிராம் என்ற பெயரில் சிகரெட்டுகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 100 பெட்டிகளில் இருந்த 4,40,000 சிகரெட்டுகள் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த வகை சிகரெட்டுகளுக்கு இந்தியாவி்ல் தடை இருப்பதால் விற்பனை செய்ய முடியாது. இதனால் இது கேரளாவில் கடத்தி விற்பனை செய்யப்படுகிறதா என்றும், இதை ஜிப்சம் போர்டு என்ற பெயரில் இறக்குமதி செய்தது யார் என்பது குறித்து வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகி்ன்றனர். இதுபோல் கடந்த பிப்ரவரி மாதம் 16-ந் தேதி இந்தோனேஷியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட தடை செய்யப்பட்ட சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications