ஈரோட்டில் கோவில் முன்பு பூக்கடைகள் அகற்றம்.. சாலையில் பூக்களை வீசி வியாபாரிகள் போராட்டம்
கோவில் முன்பிருந்த பூக்கடை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: ஈரோட்டில் கோவில் முன்பாக இருந்த பூக்கடைகளை அகற்ற வியாபாரிகள் ஒப்புகொண்ட பின்னரும் பொருட்களை அதிகாரிகள் சாலையில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதன் மற்றும் ஆருத்ர கபாலீசுவரர் திருக்கோயில் அருகில் 13 பூக்கடைகள் உள்ளது. தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு அடிப்படையில் இந்த கடைகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி கடைகளை அகற்றுமாறு கோவில் நிர்வாகத்தின் சார்பில் வியாபாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது. இதற்கு வியாபாரிகள் ஒப்புகொண்ட நிலையில் திடீரென அதிகாரிகள் கடையில் இருந்த பூக்கள் உள்ளிட்ட பொருட்களை சாலையில் வீசி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

40 ஆண்டுகளாக இந்த பகுதியில் கடைநடத்தி வரும் தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட வியாபாரிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.












Click it and Unblock the Notifications