ஜெயலலிதா மரண விவகாரம்: ஆறுமுகசாமி கமிஷனில் முன்னாள் டிஜிபி ராமானுஜம் ஆஜர்!
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி கமிஷனில் முன்னாள் டிஜிபி ராமானுஜம் ஆஜராகியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி கமிஷனில் முன்னாள் டிஜிபி ராமானுஜம் ஆஜராகியுள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி கமிஷன் ஜெயலலிதாவுடன் தொடர்புடைய பலரிடமும் விசாரித்து வருகிறது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவின் உறவினர்கள் என பலரிடமும் இந்த கமிஷன் விசாரித்து வருகிறது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆஜராகுமாறு பலருக்கும் விசாரணை கமிஷன் சம்மன் அனுப்பி வருகிறது. இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் முன்னாள் டிஜிபி ராமானுஜம் இன்று ஆஜராகினார்.
நேற்று விசாரணை ஆணையத்தில் ஆஜரான முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன், ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்களை தெரிவித்ததாக குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications