1986-ம் ஆண்டு கொலை வழக்கு: இலங்கை இந்திய தூதரகத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் 'டக்ளஸ்' ஆஜராக உத்தரவு!
சென்னை: 1986-ம் ஆண்டு சென்னை சூளைமேட்டில் நடந்த கொலை வழக்கு தொடர்பான விசாரணையில் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் அந்நாட்டின் முன்னாள் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1980களில் தமிழகத்தில் தமிழீழ விடுதலைக்கான போராடிய பல்வேறு இயக்கங்கள் தங்கி இருந்தன. சென்னையிலும் அவர்கள் ஆயுதங்களுடன் நடமாடினர்.

அந்த கால கட்டத்தில், அதாவது 1986-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி சென்னை சூளைமேடு பகுதியில் ஈழ விடுதலை இயக்கத்தில் இருந்த டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டோருக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டோர் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் திருநாவுக்கரசு என்பவர் உயிரிழந்தார்.
இது தொடர்பாக டக்ளஸ் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. 1993-ஆம் ஆண்டு டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை நீதிமன்றம் பிறப்பித்தது.
ஆனால் இந்த பிடிவாரண்ட் நீண்டகாலமாக செயல்படுத்தப்படவில்லை. இதை சுட்டிக்காட்டி டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்யக் கோரி மீண்டும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த விசாரணைகளின் முடிவில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் டக்ளஸ் தேவா இலங்கையில் இருந்தே ஆஜராகலாம் என கடந்த ஆண்டு அனுமதி அளித்தது நீதிமன்றம்.
இந்நிலையில் சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது டக்ளஸ் தேவானந்தா மீதான வழக்கை தனியாக நடத்த வேண்டும் என்று அரசுத் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதை ஏற்று இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணைக்கு டக்ளஸ் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications