தமிழக பாஜக தலைவர் பதவி... அமித்ஷா பாணியில் பொன். ராதாகிருஷ்ணன் சிறப்பு யாகம்?
Recommended Video
கும்பகோணம்: தமிழக பாஜக தலைவர் பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக கும்பகோணம் அருகே அய்யாவடி பிரத்யங்கிராதேவி கோவிலில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் யாகம் நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அய்யாவடி பிரத்யங்கிராதேவி கோவிலில் சில ஆண்டுகளுக்கு முன்னர் தற்போதைய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்காக சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. அதனை அடுத்துதான் அவர் பாஜகவின் தேசிய தலைவரானார் என்பது நம்பிக்கை.

தற்போது முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அதே கோவிலில் சிறப்பு யாகத்தை நடத்தியதாக கூறப்படுகிறது. தமிழக பாஜக தலைவர் பதவி காலியாக உள்ள நிலையில் யாருக்கு அப்பதவி கிடைக்கும் என நாள்தோறும் விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பொன். ராதாகிருஷ்ணன் யாகம் நடத்தியதே தமிழக தலைவர் பதவிக்காகத்தான் என கூறப்படுகிறது. மேலும் பிரத்யங்கிராதேவி கோவிலில் வழிபாடு நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், பாஜகவில் அமைப்பு தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. இத்தேர்தல்கள் முடிந்த பின்னர் மாநிலத் தலைவர் நியமிக்கப்படுவார் என்றார்.












Click it and Unblock the Notifications