சென்னை போலீஸ் கமிஷனர் ஆபிஸ் முன் குடும்பத்துடன் 4 பேர் தீக்குளிக்க முயற்சி
சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன் பல்லாரத்தை சேர்ந்த ஜெயராமன் என்பவர் குடும்பத்தினர் 3 பேருடன் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன் பல்லாரத்தை சேர்ந்த ஜெயராமன் என்பவர் குடும்பத்தினர் 3 பேருடன் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல்லாவரத்தில் வசித்து வருபவர் ஜெயராமன். தனது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர்கள் ரவுடிகள் போல நடந்து கொள்வதாகவும், அடித்து துன்புறுத்வதாகவும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் அந்த புகாரின் பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது ஜெயராமனின் குற்றச்சாட்டு.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஜெயராமன், இன்று காலையில் தனது மனைவி மகளுடன் சென்னை காவல்முறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்து உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அப்போது அங்கிருந்த காவலர்கள்
சொத்து விவகாரத்தில் போலீஸ் நடவடிக்கை எடுக்காததால் தீக்குளித்த முயன்றுள்ளனர். மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அனைவரையும் அழைத்துச் சென்று அவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஜெயராமன், தனது புகாரின் பேரில் பல்லாவரம் காவல்நிலைய காவலர்கள் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். வாழ்வதை விட சாவதே மேல் என்ற முடிவுக்கு வந்த தீக்குளிக்க முயற்சி செய்யதாகவும் கூறினார். ஜெயராமன் கொடுத்த புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications