மக்கள் நலக் கூட்டணிக்கு விஜயகாந்த், வாசன் வரவாய்ப்பில்லை... தமிழருவி மணியன்
சென்னை: வைகோவை ஒருங்கிணைப்பாளராகக் கொண்ட மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமாகா தலைவர் ஜிகே வாசன் ஆகியோர் இடம்பெற வாய்ப்பில்லை என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் தமிழருவி மணியன் கூறியுள்ளதாவது:
சட்டசபை தேர்தலில் 25 தொகுதிகளில் காந்திய மக்கள் இயக்கம் வேட்பாளர்களை நிறுத்த உள்ளது. எஞ்சிய 209 தொகுதிகளில் மக்கள் நலக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்போம்.

மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக, தமாகா இடம்பெறாது. அதிமுக, திமுகவின் செயல்பாடுகள் சரியானதாக இல்லை
இவ்வாறு தமிழருவி மணியன் கூறினார்.
அதிமுக, திமுகவுக்கு மாற்றாக காந்திய மக்கள் இயக்கம், 2 இடதுசாரி கட்சிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி என 6 கட்சிகளைக் கொண்ட மக்கள் நல கூட்டியக்கத்தை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர் தமிழருவி மணியன். பின்னர் அவரே முதல் நபராக மக்கள் நல கூட்டியக்கத்தை விட்டு வெளியேறினார்.
இந்த கூட்டியக்கம், தேர்தலுக்கான கூட்டணியாக உருவெடுத்த நிலையில் மனித நேய மக்கள் கட்சியும் இதனை விட்டு வெளியேறியது. தற்போது 4 கட்சி கூட்டணியாக சுருங்கியுள்ளது.
இந்நிலையில் தேர்தலில் 209 தொகுதிகளில் மீண்டும் மக்கள் நலக் கூட்டணியை ஆதரிக்கப் போவதாக தமிழருவி மணியன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications