15 நாளில்.. மிகப் பெரிய இயக்கமாக மாறப் போகிறோம்.. சொல்கிறார் தமிழருவி மணியன்
மதுரை: இன்னும் 15 நாட்களில் நாங்கள் பெரிய இயக்கமாக ஆகி உங்கள் முன் வந்து நிற்போம் என்று மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
காந்திய மக்கள் இயக்கத்தின் பொதுக் கூட்டம் மதுரையில் நடைபெற்றது. கூட்டத்தில் மேற்கு சட்டசபை தொகுதி வேட்பாளர் ஈஸ்வரன் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டார். கூட்டத்தில் கலந்து கொண்ட காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் உரை நிகழ்த்தினார்.

அப்போது அவர் கூறுகையில்,
தமிழகத்தில் ஆரோக்கியமான அரசியலை கொண்டு வர விரும்புகிறோம். நாங்கள் வெற்றி பெற்றால் அது மக்களின் வெற்றி. நாங்கள் தோல்வி அடைந்தால் அது மக்களின் தோல்வி.
இந்த ஈஸ்வரனை கோடீஸ்வரனாக ஆக்க வேண்டும் என அவரை வேட்பாளர் ஆக்கவில்லை. திராவிடக் கட்சிகளிடம் இருந்து தமிழகத்தை மீட்கவே அவரை வேட்பாளர் ஆக்கியுள்ளோம். ஈஸ்வரன் வெற்றி பெற்று சட்டசபைக்கு சென்றால் சம்பளமே வாங்க மாட்டார்.
அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் முடியட்டும்-தமிழகம் விடியட்டும் என நினைத்து மாற்று அரசியலை உருவாக்க மக்கள் முயற்சி செய்ய வேண்டும். இன்னும் 15 நாட்களில் நாங்கள் பெரிய இயக்கமாக ஆகி உங்கள் முன் வந்து நிற்போம் என்றார்.












Click it and Unblock the Notifications