சீக்கிரம் குணமடைந்து வாருங்கள் அப்பா.. கருணாநிதி குறித்து குஷ்பு நெகிழ்ச்சி டிவிட்
திமுக தலைவர் கருணாநிதியின் சீக்கிரம் குணமடைந்து வர வேண்டும் என்று காத்திருப்பதாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு டிவிட் செய்துள்ளார்.
Recommended Video
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் சீக்கிரம் குணமடைந்து வர வேண்டும் என்று காத்திருப்பதாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு டிவிட் செய்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த 2 நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் சிறுநீரக பாதையில் ஏற்பட்ட தொற்று ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக அவர் இப்போது வீட்டில் இருந்த படியே சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் அவர் நலமுடன் இருப்பதாக ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக அவரை அரசியல் தலைவர்கள் வந்து சந்தித்து செல்கிறார்கள்.
My guru in politics and father figure @kalaignar89 will be fine.. he should be fine..for the people of TN.. he is the messiah of goodwill.. get well soon Appa..we are waiting to hear you roar..
— khushbusundar..and it's NAKHAT KHAN for the BJP.. (@khushsundar) July 26, 2018
தற்போது திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பற்றி காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு டிவிட் செய்து இருக்கிறார்.
அதில் ''எனக்கு அரசியல் குரு, அப்பா போன்றவர். அவர் குணமடைவார். அவர் குணமடைய வேண்டும். தமிழ்நாட்டு மக்களுக்காக அவர் குணமடைய வேண்டும். சீக்கிரம் சரியாகுங்கள் அப்பா. உங்கள் கர்ஜனையை கேட்க காத்திருக்கிறோம்.'' என்று உணர்ச்சிகரமாக டிவிட் செய்துள்ளார்.