இளங்கோவன் நீண்ட நாள் வாழ வாழ்த்துகிறேன்.. வீடு, அலுவலக முற்றுகை வேண்டாம்: ஜி.கே.வாசன் பதிலடி
சென்னை: தாம் இறந்துவிட்டதாக கூறிய தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இளங்கோவன் நீண்டகாலம் வாழ வாழ்த்துவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். அத்துடன் இளங்கோவனின் வீடு, அலுவலகம் போன்றவற்றை முற்றுகையிட வேண்டாம் என்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினரை ஜி.கே.வாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஒன்றுக்கு பதிலளித்த இளங்கோவன், வாசன் இறந்துவிட்டாரே எனக் கூறினார். பின்னர் சுதாரித்துக் கொண்டு நான் எஸ்.எஸ்.வாசனைப் பற்றி சொன்னேன் என பல்டி அடித்துவிட்டார் இளங்கோவன்.

இளங்கோவனின் இந்த கருத்துக்கு எதிராக ஆங்காங்கே தமிழ் மாநில காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக ஜி.கே.வாசன் இன்று வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறிய சில வார்த்தைகள் இன்றைக்கு மிகவும் பெரிய எதிர்ப்பை உருவாக்கி இருக்கிறது. ஒரு கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் வார்த்தைகளை மிக கவனமாக பேச வேண்டும். அதுவும் வரம்பு மீறிய வார்த்தைகளால் குறிப்பாக அரசின் உயர் பதவியில் இருப்பவர்களை விமர்சிப்பது யாராக இருந்தாலும் எந்த இயக்கத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் மனதை புண்படுத்தும் வகையில் பேசுவது ஏற்புடையது அல்ல.
அரசியல் மாறுபாடுகள், வேறுபட்ட கொள்கை மோதல்கள் இவையெல்லாம் தனி மனிதத் தாக்குதலுக்கு வழி வகுக்கக்கூடாது. இன்றைய தலைவர்கள் மற்றும் இயக்கங்களின் செயல்பாடுகள் அனைத்தையும் மக்கள் மிகவும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நேற்று ஈரோட்டில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தபோது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மூத்த தலைவர் நான் வாழ்த்த வயதில்லை அவர் நீண்ட நாள் வாழ வேண்டும் என்றும் என்னைப் பற்றி அவர் உபயோகித்த வார்த்தைகளுக்காக தொண்டர்கள் எந்தவிதமான ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட வேண்டாம் என்றும் கேட்டிருந்தேன்.
நான் மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் நண்பர்களை நான் கேட்டுக்கொள்வது ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடாமல் மதுவுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் கவனம் சொலுத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அதே நேரத்தில் கட்சி அலுவலகம், வீடுகள் போன்றவற்றை முற்றுகை இடுவது கோஷம் இடுவது ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் எல்லாவற்றிற்கும் மேலாக அரசியல் நாகரிகத்தை எதிர்பார்க்கும் தமிழ் மாநில காங்கிரசின் வேண்டுகோள் இதுதான்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications