காந்திய மக்கள் இயக்கத்தின் 18 வேட்பாளர்கள்: ஜூலை 17ல் திருப்பூரில் அறிமுகம்
சென்னை: தமிழகத்தில் மற்ற கட்சிகள் மீதுள்ள வெறுப்பினால், சட்டமன்றத் தேர்தலை சந்திக்க உள்ளதாக காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்தார். திருப்பூரில் வரும் 17ம் தேதி சட்டமன்ற வேட்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அதற்கான பணிகளில் அந்த இயக்கத் தொண்டர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக சட்டப்பேரவைக்கு 2016ல் நடக்கும் பொதுத் தேர்தலில் 30 தொகுதிகளில் காந்திய மக்கள் இயக்கம் தனித்துப் போட்டியிடும் என்று கூறியுள்ள தமிழருவி மணியன். முதல்கட்டமாக சனிக்கிழமையன்று 18 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய தமிழருவி மணியன், வரும் சட்டப்பேரவை தேர்தலில் மாவட்டத்துக்கு ஒரு வேட்பாளரை நிறுத்த உள்ளோம். முதல்கட்டமாக இந்தப் பொதுக்கூட்டத்தில், 18 வேட்பாளர்களை அறிவிப்பதாக கூறினார்.

உறுதிமொழி ஏற்பு
இந்த 18 பேரும் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15ம் தேதி அவரது சிலைக்கு முன்பாக ‘மதுவற்ற மாநிலம், ஊழலற்ற நிர்வாகம் அமைப்போம், பொது வாழ்வில் தூய்மையாக இருப்போம்' என உறுதிமொழி ஏற்பர்.

திருப்பூரில் அறிமுகம்
திருப்பூரில் வரும் 17ம் தேதி சட்டமன்ற வேட்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அதற்கான பணிகளில் அந்த இயக்கத் தொண்டர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஊழலற்ற நிர்வாகம்
எங்களிடம் பணம் இல்லை. மக்களை மட்டுமே நம்பி தேர்தலை சந்திக்கிறோம். புழுத்துப்போன அரசியலை புனிதப்படுத்த இருக்கிறோம். ‘ஊழலற்ற நிர்வாகம், மதுவற்ற மாநிலம்' என்கிற கொள்கையை முன்னெடுக்க உள்ளோம்.

கட்சிகள் மீது வெறுப்பு
தமிழகத்தில், மற்ற கட்சிகள் மீதான வெறுப்பில்தான் நாங்கள் சட்டப்பேரவைத் தேர்தலில் களம் இறங்குகிறோம். எங்கள் வேட்பாளர்கள், தமிழகத்தில் ஒரு முன்மாதிரி சட்டமன்ற உறுப்பினராக உருவெடுப்பர். இனி யாருக்கும் இரவல் குரல் கொடுக்க மாட்டோம்.

பதவிமோகமில்லை
அதேசமயம் இன்னொரு கட்சியின் தோளில் அமர்ந்து பயணிக்க மாட்டோம். எங்களுக்கு பதவி மோகம் கிடையாது. அரசியல் ஆதாயத்துக்காக நாங்கள் அரசியலுக்கு வரவில்லை.

கூட்டணி கிடையாது
காங்கிரஸ், பாஜக, திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைக்கமாட்டோம். இவர்களிடமிருந்து, விலகி நிற்போம். இம்முறை, மாவட்டத்துக்கு ஒருவரை தேர்தலில் நிறுத்துகிறோம் என்று கூறியுள்ளார் தமிழருவி மணியன்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications