தமிழகத்தில் கூட்டணியை பற்றியே யோசித்ததால் தான் காங்கிரஸுக்கு இந்த நிலை: ஞானதேசிகன்
சென்னை: தமிழகத்தில் கூட்டணி பற்றி மட்டுமே யோசித்துக் கொண்டிருந்ததால் தான் காங்கிரஸ் கட்சிக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்று மாநில தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.

கிராமம் தோறும் காங்கிரஸ், இல்லம் தோறும் கை சின்னம் என்று காங்கிரஸ் கட்சி மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறது. இந்நிலையில் இன்று சென்னையில் உள்ள எம்.எம்.டி.ஏ. காலனி, புரசைவாக்கம் ஆகிய இடங்களில் காங்கிரஸ் கட்சிக் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய அக்கட்சியின் மாநில தலைவர் ஞானதேசிகன் பேசுகையில்,
தேசிய அளவில் மதசார்பற்ற கட்சிகளுடன் கூட்டணி வைப்பது குறித்து முடிவு செய்வது மேலிடத்தின் பொறுப்பு ஆகும். தமிழகத்தில் கூட்டணி பற்றி மட்டுமே யோசித்துக் கொண்டிருந்ததால் தான் காங்கிரஸ் கட்சிக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. கட்சியை வலுப்படுத்துவது தான் தற்போது நம்முடைய கடமை ஆகும். எல்லோரும் ஒன்றாக சேர்ந்து குரல் எழுப்பினால் அது தமிழகம் முழுவதும் எதிரொலிக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications