வாகன ஓட்டிகளே ஹேப்பியா.. சென்னை மக்களுக்கு இதுதான் சூப்பர் செய்தி.. தரமான உத்தரவு போட்ட மாநகராட்சி
சென்னை : சென்னையில் புதிதாக சீரமைக்கப்படும் சாலைகளில் ஒரு வருடத்திற்கு பள்ளம் தோண்டுவதற்கு சென்னை மாநகராட்சி தடை விதித்துள்ளது.
சென்னையில் இப்போது எங்கு பார்த்தாலும் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக, மெட்ரோ (குடிநீர்)பணிகள் காரணமாகவும், மழை நீர் வடிகால் பணிகள் காரணமாகவும் அதிக அளவில் தோண்டப்பட்டுள்ளன. சென்னை நகரமே பல இடங்களில் பள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பாதாள சாக்கடை, மழை நீர் வடிகால், குடிநீர் பைப் லைன் போன்ற பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள், புதிதாக சீரமைக்கப்படும் சாலைகள் கூட இந்த வேலைகளால், வாகனங்கள் செல்லவே முடியாத நிலைக்கு மாறிவிடுகின்றன.
திடீரென தோண்டப்படும் பள்ளங்கள் குறித்து சரிவர தெரியாததால் விபத்தில் சிக்கும் அபாயமும் எழுகிறது. சாலைகளில் சென்னை நகர் முழுவதுமே மழைக்குள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அதேபோல் சாலைகளில் குடிநீர் வடிகால் வாரியம், மின்சார வாரியம் போன்றவை அடிக்கடி பள்ளம் தோண்டுவதால், இதனால் ஏற்படும் அசவுகரியம் பற்றி மக்கள் சென்னை மாநகராட்சிக்கு தொடர்ந்து புகார் அளித்து வந்தனர்.
இந்நிலையில் தான், சென்னையில் சீரமைக்கப்படும் சாலைகளில் ஒரு வருடத்திற்கு பள்ளம் தோண்டுவதற்கு சென்னை மாநகராட்சி தடை விதித்துள்ளது.

சென்னையில் 58 பேருந்து தடங்கள் சாலைகளில் புதிதாக தார் போடப்பட்டு சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சுமார் ரூ. 49.32 கோடி செலவில் சாலை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. 16 சாலைகளில் இந்த பணிகள் நிறைவடைந்திருக்கின்றன. 1382 உள்சாலைகளை சீரமைக்க 137 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றில் 26 சாலைகள் பேருந்துகள் செல்லும் சாலைகள் ஆகும்.
சீரமைக்கப்பட்ட சாலைகளில், மின்சார வாரியம், குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்டவை பணி நிமித்தம் காரணமாக பள்ளம் தோண்டுவதாக ஏராளமான புகார்கள் எழுந்திருக்கின்றன. இந்த நிலையில் புதிதாக தார் போடப்படும் சாலைகளில் அடுத்த ஒரு வருடத்திற்கு எந்த ஒரு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பள்ளம் தோண்டக்கூடாது என்று சென்னை மாநகராட்சி தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை குடிநீர் வாரியம், மின்சார வாரியம் உள்ளிட்ட அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் இது தொடர்பான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ்












Click it and Unblock the Notifications