Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாகன ஓட்டிகளே ஹேப்பியா.. சென்னை மக்களுக்கு இதுதான் சூப்பர் செய்தி.. தரமான உத்தரவு போட்ட மாநகராட்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை : சென்னையில் புதிதாக சீரமைக்கப்படும் சாலைகளில் ஒரு வருடத்திற்கு பள்ளம் தோண்டுவதற்கு சென்னை மாநகராட்சி தடை விதித்துள்ளது.

சென்னையில் இப்போது எங்கு பார்த்தாலும் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக, மெட்ரோ (குடிநீர்)பணிகள் காரணமாகவும், மழை நீர் வடிகால் பணிகள் காரணமாகவும் அதிக அளவில் தோண்டப்பட்டுள்ளன. சென்னை நகரமே பல இடங்களில் பள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

good news: Chennai Corporation bans the digging of ditches for one year on the roads

சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பாதாள சாக்கடை, மழை நீர் வடிகால், குடிநீர் பைப் லைன் போன்ற பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள், புதிதாக சீரமைக்கப்படும் சாலைகள் கூட இந்த வேலைகளால், வாகனங்கள் செல்லவே முடியாத நிலைக்கு மாறிவிடுகின்றன.

திடீரென தோண்டப்படும் பள்ளங்கள் குறித்து சரிவர தெரியாததால் விபத்தில் சிக்கும் அபாயமும் எழுகிறது. சாலைகளில் சென்னை நகர் முழுவதுமே மழைக்குள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

அதேபோல் சாலைகளில் குடிநீர் வடிகால் வாரியம், மின்சார வாரியம் போன்றவை அடிக்கடி பள்ளம் தோண்டுவதால், இதனால் ஏற்படும் அசவுகரியம் பற்றி மக்கள் சென்னை மாநகராட்சிக்கு தொடர்ந்து புகார் அளித்து வந்தனர்.

இந்நிலையில் தான், சென்னையில் சீரமைக்கப்படும் சாலைகளில் ஒரு வருடத்திற்கு பள்ளம் தோண்டுவதற்கு சென்னை மாநகராட்சி தடை விதித்துள்ளது.

good news: Chennai Corporation bans the digging of ditches for one year on the roads

சென்னையில் 58 பேருந்து தடங்கள் சாலைகளில் புதிதாக தார் போடப்பட்டு சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சுமார் ரூ. 49.32 கோடி செலவில் சாலை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. 16 சாலைகளில் இந்த பணிகள் நிறைவடைந்திருக்கின்றன. 1382 உள்சாலைகளை சீரமைக்க 137 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றில் 26 சாலைகள் பேருந்துகள் செல்லும் சாலைகள் ஆகும்.

சீரமைக்கப்பட்ட சாலைகளில், மின்சார வாரியம், குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்டவை பணி நிமித்தம் காரணமாக பள்ளம் தோண்டுவதாக ஏராளமான புகார்கள் எழுந்திருக்கின்றன. இந்த நிலையில் புதிதாக தார் போடப்படும் சாலைகளில் அடுத்த ஒரு வருடத்திற்கு எந்த ஒரு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பள்ளம் தோண்டக்கூடாது என்று சென்னை மாநகராட்சி தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னை குடிநீர் வாரியம், மின்சார வாரியம் உள்ளிட்ட அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் இது தொடர்பான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+